இந்தியா - மேற்கிந்தியா அணிகள் மோதும் 3-வது டி20 போட்டியில் இருந்து உமேஷ் யாதவ், பூம்ரா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது!
இந்தியா - மேற்கிந்திய அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் நவம்பர் 11-ஆம் நாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இருந்து உமேஷ் யாதவ், பூம்ரா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிகவேக பந்துவீச்சாளர் சித்தார்த் கவுள் அணியில் இடம்பிடித்திருப்பதாகவும் BCCI செய்திவெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்தமாதம் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இத்தொடரில் வீரர்கள் முழுதிறனுடன் செயல்பட ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாவும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
UPDATE: Umesh Yadav, Jasprit Bumrah & Kuldeep Yadav rested for 3rd Paytm #INDvWI T20I in Chennai@sidkaul22 added to India's squad
— BCCI (@BCCI) November 9, 2018
Details - https://t.co/hqzMTMT8rZ pic.twitter.com/tbdbLBfwEI
இந்தியாவில் சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட், ஒருநாள் தொடர்களை இந்தியா வெற்றியுடன் முடித்துள்ள நிலையில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் அபாரமாக வென்ற இந்திய தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் வரும் நவம்பர் 11-ஆம் நாள் நடைபெறவுள்ள போட்டி வரும் ஆஸ்திரேலியா தொடருக்கான பயிற்சி போட்டியாகவே கருதப்படுகிறது.
அதே வேலையில் இரண்டு டி20 போட்டிகளிலும் தோல்வி கண்ட டி20 நடப்பு சேம்பியனான மேற்கிந்திய அணி, இப்போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்ப முயற்சித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவின் பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு அளித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பலபரீட்சை மேற்கொள்ளவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.