இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலம் பெரும்பாலும் கிரிக்கெட் வீரர்கள் ஒரே இரவில் கோடீஸ்வரர்களாக மாற்றுகிறது. வளர்ந்து வரும் இளம் வீரர்கள் பெரிய தொகைக்கும் ஒப்பந்தம் ஆவது பெரிய அளவில் பேசப்படும் அதே வேளையில், ஏலத்தில் சில மூத்த வீரர்கள் விலை போகாமல் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை கொச்சியில் நடந்த ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா ஒரு உரிமையாளரிடமிருந்து கூட ஆர்வத்தை ஈர்க்கவில்லை. சந்தீப் தான் விலை போகாமல் இருப்பதைக் கண்டு "அதிர்ச்சியும் ஏமாற்றமும்" அடைந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
No bids for Sandeep Sharma.
— Cricbuzz (@cricbuzz) December 23, 2022
Riley Meredith, Taskin Ahmed, Dushmantha Chameera and Blessing Muzarabani go UNSOLD as well.#IPL2023Auction pic.twitter.com/8RDZborneR
மேலும் படிக்க | IND vs SL: முக்கிய வீரரை கழட்டிவிட பிசிசிஐ முடிவு!
"நான் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளேன்," என்று சந்தீப் சர்மா சமீபத்திய பேசியில் கூறியுள்ளார். "நான் ஏன் விற்கப்படாமல் போனேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் எந்த அணிக்காக விளையாடினேனோ அதை சிறப்பாகச் செய்துள்ளேன், சில அணிகள் எனக்காக ஏலம் எடுக்கும் என்று உண்மையாக நினைத்தேன். உண்மையைச் சொல்வதானால், இதை நான் எதிர்பார்க்கவில்லை. உள்நாட்டு கிரிக்கெட்டில், நான் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். ரஞ்சி டிராபியில் கடைசி சுற்றில், ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினேன். சையது முஷ்டாக் அலியில் நான் சிறப்பாக செயல்பட்டேன். எனது பந்துவீச்சில் நான் எப்போதும் நிலையாக இருக்க முயற்சிப்பேன். அது மட்டுமே என் கையில் உள்ளது. தேர்வையோ, தேர்வு செய்யாததையோ என்னால் கட்டுப்படுத்த முடியாது. ஒரு வாய்ப்பு வந்தால் நல்லது, இல்லையெனில் நான் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும்" என்று கூறினார்.
Feeling Sad For Sandeep Sharma #ipl #IPL2023 #IPLAuctions pic.twitter.com/OcfHTI4622
— Sports Cheetah (@sports_cheetah_) December 26, 2022
சந்தீப் எந்த அணிக்காக விளையாடியிருந்தாலும், குறிப்பாக பவர்பிளேயில் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். சந்தீப் ஒரு இன்னிங்ஸுக்கு 1.09 விக்கெட்டுகளுடன், ஆல்-டைம் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார். ஆனால், ஐபிஎல் 2023 ஏலத்தில் அவரை எந்த அணியும் எடுக்கவில்லை. 50 லட்சம் ரூபாய் அடிப்படை விலையை நிர்ணயித்த சந்தீப், ஏலத்தில் உரிமையாளர்களிடமிருந்து ஏலம் எடுக்க முடியாமல் போயிருக்கலாம். சந்தீப், தன்னிடம் உள்ள திறமை மற்றும் அனுபவத்தை கருத்தில் கொண்டு, தேவை ஏற்படும் பட்சத்தில் மாற்று வீரராக உரிமையாளரின் பட்டியலில் இடம்பிடிக்கலாம்.
மேலும் படிக்க | அம்மாடியோ! இத்தனை போட்டிகளா? 2023ல் இந்திய அணி விளையாடும் தொடர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ