Home> Sports
Advertisement

ஒரே இடத்தில் 2 கிரிக்கெட் ஜாம்பவான்கள்... ஆனால் வேறு களம் - வைராலகும் புகைப்படங்கள்

சச்சின் டெண்டுல்கர், தோனி ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஒரே இடத்தில் 2 கிரிக்கெட் ஜாம்பவான்கள்... ஆனால் வேறு களம் - வைராலகும் புகைப்படங்கள்

சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகிய இரண்டு பெயர்களை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நீக்கவே இயலாது. இந்திய அணிக்க மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் இவர்களின் கொடை என்பது அளவிட முடியாதது. 

30 வருடங்களுக்கு மேலாக கிரிக்கெட்டில் அசைக்க முடியாத மாஸ்டர் பிளாஸ்டராக வலம் வந்த சச்சின் டெண்டுல்கர், சர்வதேச அளவில் 100 சதங்கள் உள்பட ஒட்டுமொத்தமாக 34 ஆயிரத்து 357 ரன்கள் ரன்களை குவித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 

ஐபிஎல் தொடரிலும் 78 போட்டிகளில் விளையாடி மொத்தம் 2334 ரன்களை குவித்த அவர், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் பயிற்சியாளர்களுள் ஒருவராக உள்ளார். சமீபத்தில், நடந்து முடிந்த சாலை பாதுகாப்பு உலக தொடருக்கு இந்திய லெஜண்ட்ஸ் அணியை தலைமை தாங்கிய சச்சின், தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றுகொடுத்துள்ளார். 

மேலும் படிக்க  | SA தொடரில் இடம் பிடித்த புதிய வீரர்! யார் இந்த முகேஷ் குமார்?

மறுபுறம், 1983-க்கு பிறகு இந்திய அணியின் உலகக்கோப்பை கனவை நிறைவேற்றி தந்தவர் மகேந்திர சிங் தோனி. இவர் தலைமையில்தான் 2011ஆம் ஆண்டு, இந்திய உலகக்கோப்பையை கைப்பற்றியது. அதுமட்டுமின்றி, உலக அரங்கில் இந்திய அணியை வலுவாக்கியதில் தோனியில் பங்கு அளப்பரியது. 2020ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த தோனி தற்போது, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். 

சச்சின், தோனி ஆகியோர் ஓய்வுக்கு பிறகும் பல்வேறு விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில், தோனியின் ஓரியோ பிஸ்கட் விளம்பரம் கூட பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், இருவரும் இணைந்து விளம்பரம் ஒன்றில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டென்னிஸ் ஆடுகளத்தில் நடைபெற்ற அதன் படப்பிடிப்பின்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. டென்னிஸ் ரேக்கெட் உடன் இருவரும் இருக்கும் அந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

இந்திய, தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி மழையால் தாமதாக தொடங்கிய நிலையில், சச்சின், தோனி ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று தீனியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க  | 15 வருட ஏக்கத்தை போக்க... கனவுகளுடன் ஆஸ்திரேலியா பறந்த இந்திய அணி; கோட்சூட் கிளிக்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More