Home> Sports
Advertisement

ஒருநாள் போட்டியின் தவிர்க்க முடியாத நாயகன் ரோகித் ஷர்மா!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், டேவிட் வார்னர் சாதனைகளை பின்னுக்கு தள்ளி ரோகித் ஷர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்!

ஒருநாள் போட்டியின் தவிர்க்க முடியாத நாயகன் ரோகித் ஷர்மா!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், டேவிட் வார்னர் சாதனைகளை பின்னுக்கு தள்ளி ரோகித் ஷர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்!

இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் ஷர்மா தனது 21-வது ஒருநாள் சதத்தினை பூர்த்தி செய்துள்ளார். அத்துடன் ஒருநாள் போட்டிகளில் 150 ரன்கள் கடந்தவர்கள் பட்டியலில் தனது பெயரினை உறுதியாக பதித்துள்ளார்!

முன்னதாக கடந்த அக்டோபர் 21-ஆம் நடைப்பெற்ற போட்டியில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா 152(117) ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். இந்த ரன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 150 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் ரோகித் ஷர்மா முதலிடம் பிடித்தார். இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், டேவிட் வார்னர் தலா 5 முறை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோகித் ஷர்மா ஆட்டத்தின் 42-வது ஓவரில் தனது 150-வது ரன்னை கடந்தார். இதன் மூலம் தனது சாதனையினை தானே முறியடித்துள்ளார்.

அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை 300 ரன்கள் வரை எடுத்து சென்ற ரோகித் ஷர்மா ஆட்டத்தின் 43.5-வது பந்தில் 162(137) ரன்களுக்கு வெளியேறினார்!

Read More