Home> Sports
Advertisement

US Open போட்டிகளில் இருந்து வெளியேறினார் ரபெல் நடால்!

அமெரிக்க ஒபன் இறுதி போட்டியில் டெல்போட்ரோ-வை எதிர்த்து ஜோகோவிச் களம் காணுகின்றார்!

US Open போட்டிகளில் இருந்து வெளியேறினார் ரபெல் நடால்!

நியூயார்க்: அமெரிக்க ஒபன் இறுதி போட்டியில் டெல்போட்ரோ-வை எதிர்த்து ஜோகோவிச் களம் காணுகின்றார்!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரை இறுதி ஆட்டத்தில் இரண்டுமுறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜோகோவிச் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இந்த அரை இறுதி போட்டியில் உலக தரவரிசையில் 21-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீரர் நிஷிகோரியை, ஜோகோவிச் சந்தித்தார். பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே ஜோகோவிச் கை ஓங்கியிருந்தது. இதன் காரணமாக தன்னை எதிர்த்து விளையாடிய நிஷிகோரியை, ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரை இறுதிப் போட்டியில் நடப்பு சேம்பியனும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவருமான ரபெல் நடால், அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோவை சந்திக்கவிருந்தார். ஆனால் போட்டியின் முன் தனது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எனவே டெல்போட்ரோ இறுதி போட்டிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இறுதிப்போட்டியில் டெல்போட்ரோ-வை எதிர்த்து ஜோகோவிச் விளையாடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

Read More