Home> Sports
Advertisement

உலக சாதனை செய்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்

உலக சாதனை செய்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை குவித்த வீராங்கனை என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார். மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தச் சாதனையை மித்தாலி ராஜ் நிகழ்த்தி உள்ளார்.

மகளிர் கிரிக்கெட் அணிக்கான உலக கோப்பை இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இந்திய அணி, ஆஸ்திரேலியா அணி மோதின. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 33 ரன்களை கடந்த போது மகளிர் கிரிக்கெட் ஒரு நாள் போட்டியில் 6,000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமையை தனதாக்கி கொண்டார்.

Read More