Home> Sports
Advertisement

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: கலப்பு இரட்டையர் பிரிவில் 2வது தங்கம் வென்ற இந்தியா

கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் மனு பாகர் மற்றும் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றனர்.

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: கலப்பு இரட்டையர் பிரிவில் 2வது தங்கம் வென்ற இந்தியா

சீனாவின் பெய்ஜிங் நகரில் சர்வதேச உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு நடத்தி வருகிறது. இந்த போட்டியில் கலந்துக்கொண்ட இந்திய வீரர்கள் தங்கம் வென்று அசத்தி வருகின்றனர்.

இன்று நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் மனு பாகர் மற்றும் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றனர். 16-6 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் ஜியாங் ரன்க்சின் மற்றும் பாங் வேய் என்ற இரட்டையரை தோற்கடித்தனர். இது இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் ஆகும்.

 

 

Read More