இந்தியா - மேற்கிந்திய அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் இன்று (நவம்பர் 11-ஆம் நாள்) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
முன்னதாக நடைப்பெற்ற இரண்டு டி20 போட்டிகளிலும் இந்தியா வெற்றிப்பெற்றதை அடுத்து டி20 தொடரினை வென்றது. இந்நிலையில் இன்று நடைப்பெறும் போட்டியில் மேற்கிந்தியா வெற்றி பெரும் பட்சத்தில் ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பும்.
இன்றைய போட்டியில்...
- இன்றைய போட்டியில் இருந்து இந்தியாவில் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் உமேஷ் யாதவ், பூம்ரா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது. அடுத்தமாதம் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இத்தொடரில் வீரர்கள் முழுதிறனுடன் செயல்பட ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக BCCI விளக்கம் அளித்துள்ளது.
- இன்றைய போட்டியில் ரோகித் ஷர்மா 69 ரன்கள் குவித்தார் டி20 போட்டிகளில் அதிக ரன்குவித்த வீரர் என்ற பெருமையினை பெறுவார். இந்த சாதனை பட்டியலில் தற்போது நியூசிலாந்து அணி வீரர் MJ குப்தில் 2271 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து இந்தியாவின் ரோகித் ஷர்மா 2203 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.