Home> Sports
Advertisement

IPL 2020: Suresh Raina, Harbhajan Singh ஆகியோருடனான ஒப்பந்தங்களுக்கு The End: CSK

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) நடந்து வரும் IPL 2020 க்கு இடையில், சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் உடனான அனைத்து ஒப்பந்த உறவுகளையும் முடிவுக்கு கொண்டுவர சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) முடிவு செய்துள்ளது என்று இப்போது தெரிய வந்துள்ளது.

IPL 2020: Suresh Raina, Harbhajan Singh ஆகியோருடனான ஒப்பந்தங்களுக்கு The End: CSK

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) நடந்து வரும் IPL 2020 க்கு இடையில், சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் உடனான அனைத்து ஒப்பந்த உறவுகளையும் முடிவுக்கு கொண்டுவர சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) முடிவு செய்துள்ளது என்று இப்போது தெரிய வந்துள்ளது.

CSK நிர்வாகம், சுரேஷ் ரெய்னா (Suresh Raina) மற்றும் ஹர்பஜன் ஆகியோரின் பெயர்களை அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து நீக்கியது மட்டுமல்லாமல், விதிமுறைப்படி, இரு வீரர்களுடனான அனைத்து ஒப்பந்த உறவுகளையும் நிறுத்திக்கொள்ளும் பணியைத் தொடங்கியுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2018 ஆம் ஆண்டு IPL ஏல வழிகாட்டுதலின் படி, ஹர்பஜன் மற்றும் ரெய்னா இருவரும் CSK-வுடன் 3 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது 2020 IPL சீசனுடன் காலாவதியாகிறது.

இரு வீரர்களும் தற்போதைய IPL போட்டிகளில் இருந்து விலகியுள்ளதால், இருவருடனான ஒப்பந்தங்களை அதிகாரப்பூர்வமாக நிறுத்த CSK முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ: IPL 2020: சின்ன தல Suresh Raina திரும்ப வராரா இல்லையா? என்னதான் சொல்றாங்க CSK?

CSK-உடன் ரெய்னா ஆண்டுக்கு ரூ .11 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (Harbhajan singh) அணியுடன் ரூ .2 கோடி ஆண்டு ஒப்பந்தம் செய்திருந்தார். தகவல்களின்படி, இனிமேல் இந்த சீசனுக்கான சம்பளம் இந்த வீரர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

CSK தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் வீரர்களுடனான ஒப்பந்தங்களை நிறுத்துவதை மறுக்கவில்லை என்று இன்சைட்ஸ்போர்ட் அறிக்கை தெரிவித்துள்ளது. அதிக விவரங்களை வெளியிடாமல், அவர் ‘விளையாடியிருந்தால் மட்டுமே அவர்களுக்கு பணம் வழங்கப்படும். அவர்கள் இப்போது விளையாடதால் அவர்களுக்கு இந்தத் தொகை அளிக்கப்படாது’ என்று கூறினார்.

ஒப்பந்தங்களை முடித்துக்கொள்வது என்பது ரெய்னா மற்றும் ஹர்பஜன் இருவரும் இனி CSK-வின் வீரர்கள் அல்ல என்று பொருள்படும். இதன் பொருள் என்னவென்றால், அடுத்த சீசனுக்கு (IPL 2021) BCCI நேர பற்றாக்குறையால், வீரர் ஏலத்தை ஏற்பாடு செய்யவில்லை என்றால் - ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங்கிற்கு CSK-உடன் எந்த ஒப்பந்தமும் இருக்காது. மற்றொரு IPL சீசன்லும் ஆட முடியாத நிலை அவர்களுக்கு உண்டாகலாம். 

ALSO READ: CSKவின் மோசமான ஆட்டத்திற்கு டிவிட்டரில் கிழிக்கும் ரசிகர்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More