அடுத்த வருடம் நடைபெறவுள்ள IPL 2019-கான வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்து முடிந்தது. 351 வீரர்கள் கலந்துக்கொண்ட இந்த ஏலத்தில் 60 வீரர்கள் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் எந்தெந்த வீரர்களை வாங்கியது மற்றும் ஒவ்வொரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் நிலவரம் குறித்து பார்போம். ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 18 வீரர்கள், அதிகபட்சமாக 25 வீரர்களை வைத்துக்கொள்ள முடியும்.
இந்தநிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2019 சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடப்போகும் வீரர்கள் பற்று தெரிந்துக்கொள்வோம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:-
ராஜஸ்தான் ராயல்ஸ் 9 வீரர்களை ஏலத்தில் வாங்கியது. ஏற்கனவே 16 வீரர்களை தக்கவைத்துள்ளது. மொத்தம் 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளன.
ஏலத்தில் வாங்கி வீரர்கள்:
1. ஜெய்தேவ் யூனாதட்
2. வருண் ஆரோன்
3. ஓஷானா தாமஸ்
4. ஆஷ்டன் டர்னர்
5. லியாம் லிவிங்ஸ்டன்
6. சாஷ்கான் சிங்
7. ரியான் பராக்
8. மனன் வோரா
9. சுபாம் ரஞ்சன்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:-
ஜோஸ் பட்லர், அஜிங்கியா ரஹானே, கிருஷ்ணப்பா கவுதம், சஞ்சய் சாம்சன், ஷிரியாஸ் கோபால், ஆரியமன் பிர்லா, சுதேசன் மிதுன், பிரசாந்த் சோப்ரா, ஸ்டூவர்ட் பின்னி, ராகுல் திரிபாதி, தவால் குல்கர்னி, மஹிபல் லோம்ரோர், பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித், ஜோஃப்ரா ஆர்ச்சர், இஷ் சோதி
.@rajasthanroyals continued with their plan of small big results tonight in #AuctionOnStar.
— Star Sports (@StarSportsIndia) December 18, 2018
VIVO #IPLAuction picks of the day:
Oshane Thomas
Varun Aaron
Jaydev Unadkat
Riyan Parag
Ashton Turner
Manan Vohra
Shubham Ranjane
Liam Livingstone
Shashank Singh