Home> Sports
Advertisement

#INDvsSL 2_வது ஒரு நாள் போட்டி: 35_வது அரைசதத்தை பூர்த்தி செய்த ரோஹித் ஷர்மா

தனது 35_வது அரைசதத்தை பூர்த்து செய்த ரோஹித் ஷர்மா. இந்தியா 27 ஓவருக்கு ஒரு விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து தொடர்ந்து ஆடி வருகிறது

#INDvsSL 2_வது ஒரு நாள் போட்டி: 35_வது அரைசதத்தை பூர்த்தி செய்த ரோஹித் ஷர்மா

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்து உள்ளனர். அதன் படி இந்திய அணி முதலில் 'பேட்டிங்' செய்கிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 6 வார கால சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. 

இப்பயணத்தில், முன்னதாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டிகளில் இந்தியா 1-0 என்று கணக்கில் வெற்றிப் பெற்று தொடரை வென்றது. 

பின்னர் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் கடந்த டிசம்பர் 10-ம் தேதி அன்று இமாச்சல்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் துவங்கியது. இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் கோலி ஓய்வில் இருந்ததால் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா இலங்கை அணியை எதிர்த்து படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது முதல்நாள் போட்டி, பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்து உள்ளனர்.

எனவே தனது ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி நிதானமாக ஆடியது. 115 ரன்னுக்கு தான் இந்தியாவின் முதல் விக்கெட் வீழ்ந்தது. ஷிகார் தவான் 68(67) ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். பின்னர் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் சேர்ந்து ஷிரியாஸ் ஐயர் ஆடி வருகின்றனர்.
 
நன்றாக விளையாடிய கேப்டன் ரோஹித் ஷர்மா 65 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதில் ஐந்து பவுண்டரிகள் அடங்கும். இது இவருக்கு 35_வது அரை சதமாகும். தற்போதிய நிலவரப்படி இந்தியா 27 ஓவருக்கு ஒரு விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது

 

 

Read More