Home> Sports
Advertisement

#INDvsSL 2_வது ஒருநாள் போட்டி: சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் அரைசதம் அடித்த ஷிரியாஸ் ஐயர்

தனது முதல் அரை சதத்தை பூர்த்தி செய்தார் ஷிரியாஸ் ஐயர். இவர் 50 பந்துகளில் 50 ரன்களை கடந்தார்

#INDvsSL 2_வது ஒருநாள் போட்டி: சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் அரைசதம் அடித்த ஷிரியாஸ் ஐயர்

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்து உள்ளனர். அதன் படி இந்திய அணி முதலில் 'பேட்டிங்' செய்கிறது.

எனவே தனது ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி நிதானமாக ஆடியது. 115 ரன்னுக்கு தான் இந்தியாவின் முதல் விக்கெட் வீழ்ந்தது. ஷிகார் தவான் 68(67) ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். பின்னர் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் சேர்ந்து ஷிரியாஸ் ஐயர் ஆடி வருகின்றார்.

தனது முதல் அரை சதத்தை பூர்த்தி செய்தார் ஷிரியாஸ் ஐயர். இவர் 50 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். இதில் ஐந்து பவுண்டரிகள் அடங்கும். 2_வது ஒரு நாள் போட்டி விளையாடும் ஷிரியாஸ் ஐயர் தனது முதல் அரை சதத்தை இலங்கைக்கு எதிராக அடித்து உள்ளார். இமாச்சல்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிராக தனது சர்வதேச ஒருநாள் போட்டியை தொடங்கினார். 

 

 

Read More