Home> Sports
Advertisement

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றார் வினேஷ் போகத்!

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் ‘ரெபிசேஜ்’ சுற்றில் வெற்றி பெற்ற இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்துள்ளார்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றார் வினேஷ் போகத்!

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் ‘ரெபிசேஜ்’ சுற்றில் வெற்றி பெற்ற இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்துள்ளார்!

கஜகஸ்தானில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைப்பெற்று வருகிறது. இதன் பெண்கள் ‘ப்ரீஸ்டைல்’ 53 கிலோ பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் பங்கேற்றார். முதலில் நடந்த தகுதிச்சுற்றில் 13-0 என சுவீடனின் சோபியாவை வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்த நடைப்பெற்ற முதல் சுற்றில் ஜப்பானின் மாயூ முகாய்டாவிடம், வினேஷ் 7-0 என தோல்வியை சந்தித்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக மாயூ ஃபைனலுக்கு முன்னேற, வினேஷின் பதக்க கனவு ரெபிசேஜ் மூலம் மீண்டும் உயிர்பெற்றது.

தொடர்ந்து நடைப்பெற்ற ரெபிசேஜ் சுற்றின் முதல் போட்டியில் உக்ரைனின் யூலியாவை எதிர்கொண்ட வினேஷ், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5-0 என வெற்றி வாகை சூடினார். இதனைத்தொடர்ந்த நடைப்பெற்ற ரெபிசேஜ் சுற்றின் அடுத்த போட்டியில் வினேஷ், அமெரிக்காவின் சாரா ஆன்னை எதிர்கொண்டார். இந்த போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வினேஷ், 8-2 என வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் வரும் 2020-ஆம் ஆண்டில் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் வினேஷ். தவிர, டோக்கியோ ஒலிம்பிக்கிறகு தகுதி பெற்ற முதல் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையினையும் பெற்றார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் ரெபிசேஜ் சுற்றில் வெற்றி பெற்ற வினேஷ், வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா பிரிவலாரிகாவை எதிர்கொள்கிறார். இதில் வெல்லும் பட்சத்தில் உலக சாம்பியன்ஷிப்பில் வினேஷ் போகத் முதல்பதக்கம் வென்று சாதிக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More