Home> Sports
Advertisement

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஓய்வு பெறுகிறாரா? அது உண்மையா?

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அது உண்மையா?  

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஓய்வு பெறுகிறாரா? அது உண்மையா?

புதுடெல்லி: இந்தியாவின் வெள்ளி மங்கை பி.வி.சிந்து தான் ஓய்வு பெறுவதாக சமீபத்திய சமூக ஊடகப் பதிவில் வெளியிட்டு திகைப்பை ஏற்படுத்தினார்.  

25 வயதான ரியோ ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற வெள்ளி மங்கை, தனது ட்விட்டர் கணக்கில், டென்மார்க் ஓபன் தான் இறுதி மோதல் என்றும், விளையாட்டிற்கு கை காட்டுவதாகவும் எழுதியிருந்தார். இதுதான் இன்று ஏற்பட்ட பரபரப்புக்கு காரணம்.  .

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியுடன் ஒய்வு பெறுவதாக அறிவித்த திடீர் ஒய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

"இப்போது சிறிது காலமாக என் உணர்வுகள் மாறி வருவதைப் பற்றி யோசித்து வருகிறேன். அவற்றை சமாளிக்க சிரமப்பட்டேன் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். அது மிகவும் தவறான புரிதலை கொடுப்பதாகவும் உணர்கிறேன். அதனால்தான் இந்த நீண்ட பதிவை பதிவிடுகிறேன். இதைப் படித்து முடிக்கும் போது எனது பார்வையைப் பற்றி நீங்கள் புரிந்துக் கொண்டிருப்பீர்கள், அதை ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று சிந்து ஒரு நீண்ட பதிவை பதிவிட்டுள்ளார்.

"இந்த தொற்றுநோய் எனக்கு ஒரு புதிய கோணத்தைக் கொடுத்து புதிய கோணத்தை கொடுத்திருக்கிறது. விளையாட்டின் இறுதி ஷாட் வரை எதிரிகளின் கடினமான ஆக்ரோஷமான தாக்குதல்களை எதிர்த்துப் போராட நான் கடுமையாக பயிற்சி எடுத்துக் கொள்ள முடியும். நான் இதற்கு முன்பும் அவ்வாறு செய்திருக்கிறேன், மீண்டும் செய்ய முடியும். ஆனால் எப்படி உலகம் முழுவதையும் சரிசெய்ய முடியும்? இந்த கண்ணுக்கு தெரியாத வைரஸை நான் தோற்கடிக்க முடியுமா? வீட்டிலேயே பல மாதங்களாக இருக்கிறோம். ஒவ்வொரு முறையும் நாம் வெளியே செல்லும்போது நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் உள்வாங்கி கொள்கிறேன், அதோடு, இதயங்களை உடைக்கும் கதைகளை ஆன்லைனில் படிக்கும்போது மனதில் பல கேள்விகளை எழுப்புகிறது. என்னைப் பற்றியும், நாம் வாழும் இந்த உலகத்தைப் பற்றியும் நிறைய யோசிக்கிறேன். டென்மார்க் ஓபனில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாமல் போனது வருத்தமாக இருக்கிறது" என்று சிந்து மேலும் எழுதியுள்ளார்.

இருப்பினும், சிந்து பின்னர் தனது ட்வீட்டர் செய்தியில் தனது ரசிகர்களுக்கு ஒரு மினி மாரடைப்பைக் கொடுத்திருக்கலாம் என்று சிந்து ஒப்புக் கொள்கிறார், ஆனால் அவர் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை, மாறாக கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் தரமற்ற சுகாதாரத்திற்கு எதிரான போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க விரும்புகிறார்.

"இன்று, அமைதியின்மை மற்றும் வருத்தமான உணர்விலிருந்து நான் ஓய்வு பெற வேண்டும் என்ற தெரிவை நான் தேர்வு செய்கிறேன். எதிர்மறையான சிந்தனைகள், அர்த்தமற்ற அச்சம், நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றிலிருந்து நான் ஓய்வு பெறுகிறேன், தெரியாதவர்கள் மீது முழுமையான கட்டுப்பாடு இல்லாததால் அவர்களிடம் இருந்து விலகி இருக்க நான் ஓய்வு பெறுவதை தேர்வு செய்கிறேன். அதிலும் குறிப்பாக, நான் தரமற்றவையிலிருந்து ஓய்வு பெறுவதைத் தேர்வு செய்கிறேன் சுகாதாரத் தரங்கள் மற்றும் வைரஸைப் பற்றிய நமது குறைபாடுள்ள அணுகுமுறைகளை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்” என இந்தியாவின் பெருமைக்குரிய பெண் சிந்து தெளிவுபடுத்தினார்.

"நான் உங்களுக்கு ஒரு மினி மாரடைப்பைக் கொடுத்திருக்கலாம்; இதற்கு முன் எப்போதும் இல்லாத காலத்தில் (கொரோனா) நாம் இருக்கிறோம், அதை சமாளிக்க புதுமையான நடவடிக்கைகள் தேவை. நீங்கள் இதை கவனமாக கவனிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அப்போதுதான் ஒளிமயமான எதிர்காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். டென்மார்க் ஓபன் நடக்கவில்லை, ஆனால் அதற்காக நான் பயிற்சிகளை செய்யாமல் விலகியிருக்க மாட்டேன். வாழ்க்கை நமக்கு ஒரு கடினமான நேரத்தைக் கொடுக்கும்போது, அதை நாம் இருமடங்கு வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும். எனவே, ஆசிய ஓபன் போட்டிகளில் வீறு கொண்டு எழுவேன். நான் போராட்டத்தை விட்டுவிட தயாராக இல்லை. இதுவொரு திடமான சண்டை. இந்த அச்சத்தை வெல்லாமல் நான் போராட்டத்தை கைவிட மாட்டேன். நமக்க்கு ஒரு பாதுகாப்பான உலகம் வரும் வரை அவ்வாறு செய்வேன்" என்று இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து உறுதியாக இருப்பதுடன், பிறருக்கு நம்பிக்கையூட்டுகிறார்.  
முன்னதாக, 2020 அக்டோபர் 13 முதல் அக்டோபர் 18 வரை நடைபெற்ற டென்மார்க் ஓபன் போட்டிகளில் இருந்து சிந்து வெளியேறினார், கொரோனா வைரஸ் நெருக்கடிகளுக்கு மத்தியில் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு கவலைகள் காரணமாக சிந்து வெளியேறினார். 2021 ஜனவரியில் நடைபெறவிருக்கும் ஆசியா ஓபன் விளையாட்டில் அவர் பங்கேற்பார் என்று நம்பப்படுகிறது.  

2016 ஆம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் தடகள வீராங்கனை என்ற பெருமைக்கு உரியவர் பி.வி. சிந்து. அவருக்கு, மதிப்பு மிக்க பத்மஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு சிறப்பித்துள்ளது.  

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More