Home> Sports
Advertisement

Virat Kohli: மீண்டும் அப்பாவானார் விராட் கோலி! அனுஷ்காவிற்கு 2வது குழந்தை பிறந்தது!

Virat Kohli Anushka Sharma Welcomed Their Second Baby: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. அது என்ன குழந்தை தெரியுமா? 

Virat Kohli: மீண்டும் அப்பாவானார் விராட் கோலி! அனுஷ்காவிற்கு 2வது குழந்தை பிறந்தது!

Virat Kohli Anushka Sharma Welcomed Their Second Baby: கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் அவர்களின் இரண்டாவது குழந்தையை வரவேற்றுள்ளனர். இந்த குழந்தைக்கு அகே (Akaay) என பெயரிட்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பினை இவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

தங்களது குழந்தையை வரவேற்றுள்ள விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அனுஷ்கா ஷர்மா-விராட் கோலி:

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக இருப்பவர், விராட் கோலி. இவருக்கும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவிற்கும் 2017ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் திருமணம் நடைப்பெற்றது. நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வந்த இவர்கள், விளம்பர படங்களில் ஒன்றாக நடிக்கும் போது காதலில் விழுந்தனர். இதையடுத்து இவர்களின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைப்பெற்றது. திருமணத்திற்கு பிறகு, அனுஷ்கா ஒரு வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். 

மேலும் படிக்க | IND vs ENG: 4வது டெஸ்டில் பும்ரா விலகல்! இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

அனுஷ்கா ஷர்மாவிற்கும், விராட் கோலிக்கும் 2021ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு இவர்கள் வாமிகா என பெயரிட்டனர். பிறந்து சில வருடங்கள் வரை தங்களின் குழந்தையின் புகைப்படத்தை எங்குமே பதிவிடாமல் இருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு வரைதான் இவர்கள் தங்களின் குழந்தையின் புகைப்படத்தை காண்பித்தனர். 

இரண்டாவது குழந்தை:

அனுஷ்கா ஷர்மா, தனது கணவர் பங்கேற்கும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் தவறாமல் கலந்து கொள்வார். இருவரும் ஒன்றாக பத்திரிக்கையாளர்களையும் அடிக்கடி சந்திப்பர். ஆனால் கடந்த சில மாதங்களாக அனுஷ்கா கேம்ராவின் கண்களில் படாமல் இருந்தார். இதற்கு காரணம் அவர் கர்ப்பமாக இருப்பதுதான் என பலர் ஏற்கனவே கணித்து விட்டனர். ஆனால் இது குறித்து அனுஷ்காவோ விராட் கோலியோ வாய் திறக்காமல் இருந்தனர். இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ்,விராட் கோலி தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருவதாகவும், அனுஷ்கா லண்டனில் உள்ள மருத்துவமனையில் தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்க உள்ளதாகவும் ஒரு பேட்டியில் கூறிவிட்டார். இதையடுத்து அனைவரும் அனுஷ்கா கர்ப்பமாக இருக்கும் செய்தியை கன்ஃபார்ம் செய்தனர். அதன் பிறகு டிவில்லியர்ஸ், தான் தவறாக கூறிவிட்டதாக சொல்லி, மன்னிப்பு கேட்டார்.

தற்போது கடந்த15ஆம் தேதி அன்று (பிப்.,) தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அனுஷ்காவும் விராட் கோலியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். வாமிகாவிற்கு குட்டி தம்பி வந்துள்ளதாகவும் அவர்கள் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் அனைவரின் ஆசீர்வாதமும் ஒத்துழைப்பும் அவசியம் என அவர்கள் அந்த பதிவில் கேட்டுக்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | டெஸ்டில் இந்தியாவுக்காக அதிக ஆட்ட நாயகன் விருதை வென்றவர்கள் யார் யார்...?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More