Home> Sports
Advertisement

WTC இறுதிப் போட்டியில் டீம் இந்தியாவின் தோல்விக்கு 3 முக்கிய காரணங்கள்..!

ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் மீண்டும் ஐசிசி கோப்பையை வெல்லும் இந்திய அணியின் கனவும் தகர்ந்தது.  

WTC இறுதிப் போட்டியில் டீம் இந்தியாவின் தோல்விக்கு 3 முக்கிய காரணங்கள்..!

IND vs AUS: WTC இறுதி 2023 போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை தோற்கடித்து முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் ஏமாற்றமளித்தனர். இந்தப் போட்டியில் 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சாதனை இலக்கை ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், இந்திய அணி 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு 3 முக்கிய காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் 

இந்த போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் பெரிய இன்னிங்ஸ் ஆட முடியாமல் போனது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் 13, 18 என இரண்டு இன்னிங்ஸிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோஹித் சர்மாவும் பேட்டிங் ஒழுங்காக விளையாடவில்லை. முதல் இன்னிங்சில் 15 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 43 ரன்களும் எடுத்தார். சேதேஷ்வர் புஜாராவும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். விராட் கோலி மட்டும் இரண்டாவது இன்னிங்ஸில் 49 ரன்கள் எடுத்தார். 

மேலும் படிக்க | Gautam Gambhir On MS Dhoni: தோனியை தாக்கிய கம்பீர்.. வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்

தோல்விக்கு காரணம் என்ன?

ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்ற சில நாட்களிலேயே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதற்காக இந்திய வீரர்கள் முழுமையான பயிற்சியை கூட எடுக்கவில்லை. ஐபிஎல் முடிந்தவுடன் நேரடியாக இங்கிலாந்து சென்றவர்கள், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் களமிறங்கினர். ஓய்வு மற்றும் முறையான பயிற்சி இல்லாமை ஆகியவை இந்திய வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி விளையாடிய விதத்திலேயே தெரிந்தது. இதுவே தோல்விக்கு முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.

அஸ்வின் நீக்கம் பின்னடைவு

இந்த போட்டியில் உலகின் நம்பர்-1 டெஸ்ட் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினை பிளேயிங்-11ல் சேர்க்கவில்லை கேப்டன் ரோஹித் சர்மா. அவரது முடிவை பல மூத்த கிரிக்கெட் வீரர்களும் விமர்சித்துள்ளனர். இந்தப் போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும் என்று அனைவரும் தெரிவித்துள்ளனர். முதல் இன்னிங்ஸில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக உதவி கிடைக்கவில்லை, ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனை பார்க்கும்போது அஸ்வின் இருந்திருந்தால் இந்திய அணிக்கு இன்னும் பலமாக இருந்திருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

மேலும் படிக்க | சச்சின் டெண்டுல்கரே சொன்னாலும் சரி! நான் சொல்றது இதுதான்! தோல்வி குறித்து R அஸ்வின்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More