Home> Sports
Advertisement

T20 முத்தரப்பு தொடர்: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

நிதாஹாஸ் டி-20 முத்தரப்பு தொடரில் இந்தியா - இலங்கை இடையிலான முதல் ஆட்டம் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

T20 முத்தரப்பு தொடர்: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

நிதாஹாஸ் டி-20 முத்தரப்பு தொடரில் இந்தியா - இலங்கை இடையிலான முதல் ஆட்டம் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் சமீரா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா 1 ரன் எடுத்த நிலையில் நுவான் பிரதீப் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

இந்தியா அணி:-

ரோகித் சர்மா- 0 (4) 
தவான் - 90 (49)
ரெய்னா - 1 (3)
மணிஷ் பாண்டே - 37 (35)
ரிஷப் - 23 (23)
தினேஷ் கார்த்திக் - 13 (6) 

இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.

அதன்பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. 

இலங்கை அணி:-

குணதிலகா - 19 (12)
குஷால் மெண்டிஸ் - 11 (6)
குசால் பெராரா - 66 (37)
சண்டிமால் - 14 (11)
உபுல் தரங்கா - 17 (18)
சனகா - 15 (18)
திசாரா பெராரா - 22 (10)

இந்நிலையில் 175 குவித்து இலங்கை அணி வெற்றி பெற்றது. 

இந்திய அணியின் சார்பில் வாஷிங்டன் சுந்தர், சஹால் தலா 2 விக்கெட்டும், உனத்கட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

Read More