Home> Sports
Advertisement

KXIPvsSRH: டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு

இன்று நடைபெற்ற உள்ள ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மற்றும் ஹைதரபாத் அணிகள் மோதுகின்றனர்.

KXIPvsSRH: டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு

19:46 29-04-2019
இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

 

 


ஹைதரபாத்: IPL 2019 தொடரின் 48 வது லீக் ஆட்டம் ஹைதரபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கிய போட்டியாகும். இந்த போட்டியின் வெற்றி தான் அடுத்த சுற்றுக்கு யாருக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை முடிவு செய்யும். எனவே இரண்டு அணிகளுக்கும் இன்று நடைபெறும் போட்டியின் வெற்றி மிக முக்கியம். 

கிங்ஸ் XI பஞ்சாப் அணியை பொருத்த வரை 11 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 6_வது இடத்தில் உள்ளது. அதேபோல சன்ரைர்ஸ் ஐதராபாத் அணியும் 11 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 4_வது இடத்தில் உள்ளது. இரண்டு அணிகளுமே 10 புள்ளிகளை பெற்றுள்ளது. இன்று வெற்றி பெரும் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறும். எனவே இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளுமே களத்தில் கடுமையாக போராடும் என எதிர் பார்க்கப்படுகிறது. 

இந்த IPL 12_வது சீசனில் டெல்லி மற்றும் சென்னை அணி ஃப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்த இடத்தில்(3வது இடம்) மும்பை அணி உள்ளது.

fallbacks

Read More