Home> Sports
Advertisement

பென் ஸ்டோக்ஸை அனுப்பி வைக்கிறோம், ஆனால் சிஎஸ்கேவுக்கு ஒரு கண்டிஷன்; பிரெண்டன் மெக்கலம்

ஐபிஎல் 2023-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் பென் ஸ்டோக்ஸ் எந்த பிரச்சனையும் இல்லாமல் இங்கிலாந்து அணிக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை இருப்பதாக பிரெண்டன் மெக்கலம் தெரிவித்துள்ளார்.   

பென் ஸ்டோக்ஸை அனுப்பி வைக்கிறோம், ஆனால் சிஎஸ்கேவுக்கு ஒரு கண்டிஷன்; பிரெண்டன் மெக்கலம்

ஐபிஎல் 2023 தொடர் மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. இதன் முதல் போட்டியிலேயே களம் காணும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த முறை சிறப்பாக விளையாடாத சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் பழைய சிங்கமாக மீண்டும் வரும் முனைப்பில் இருக்கிறது. இப்போது நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அந்த அணிக்கு பென்ஸ்டோக்ஸ் வந்துள்ளார். உலகின் முன்னணி ஆல்ரவுண்டராக இருக்கும் அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி தலைமையில் விளையாடுவது, அந்த அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

அவர் ஏற்கனவே புனே அணிக்காக தோனி கேப்டன்சியில் விளையாடி இருக்கிறார். அவரை குறிவைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் தூக்கியது. தோனியின் அறிவுரையின் பேரிலேயே பென்ஸ்டோக்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இருப்பினும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி வரை பென் ஸ்டோக்ஸ் இருக்கமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் லீக் போட்டிகள் முழுவதும் விளையாடும் அவர், இறுதிப் போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து அணிக்கு விளையாட செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | தோனிக்கு பிறகு சிஎஸ்கே நம்பும் அந்த பிளேயர்..! ஐபிஎல் 2023-ல் முழுமையாக விளையாடுவாரா?

ஐபிஎல் தொடர் முடிந்து ஒரு சில நாட்களிலேயே அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்க இருக்கிறது. அதனால், ஒரு கேப்டனாக பென்ஸ்டோக்ஸ் சொந்த நாட்டு அணிக்காக விளையாட வேண்டியிருக்கிறது. இதனை ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் உள்ளிட்ட அணி நிர்வாகத்தினருடன் விவாதித்து இருப்பதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். தன்னுடைய நிலையை தெளிவாக எடுத்து சொல்லியிருப்பதாகவும், சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெம்மிங் தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

fallbacks

இந்நிலையில், பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் போட்டியில் விளையாடுவது குறித்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கலம் முக்கிய கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு, மீண்டிருக்கும் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வெறும் 9 ஓவர்கள் மட்டுமே வீசியிருக்கிறார். இருப்பினும் அவரை ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாட அனுப்புவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.

ஏனென்றால் சிஎஸ்கே அணி வீரர்களை மிகச்சிறப்பாக கவனித்துக் கொள்ளும். தேர்ந்த மருத்துவ குழுவினர் அணியினருடன் இருக்கின்றனர். அவர்கள் பென்ஸ்டோக்ஸை நன்றாக பார்த்துக் கொள்வார்கள். பென்ஸ்டோக்ஸூக்கும் நன்றாக தெரியும். நிச்சயம் அவர் எந்த பிரச்சனையும் இல்லாமல் இங்கிலாந்து அணிக்காக ஆஷஸ் தொடரில் விளையாடுவார். அதேநேரத்தில் இப்போது இங்கிலாந்து அணிக்காக கேப்டனாக இருக்கும் அவர், அந்த பொறுப்பு இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடுவதை பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றும் மெக்கலம் கூறியிருக்கிறார். 

மேலும் படிக்க | IPL 2023: சேப்பாக்கத்தில் தோனி - மைதானத்துக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Read More