Home> Sports
Advertisement

AUS vs IND: 3வது ODI இல் விளையாடும் தமிழக வீரர் நடராஜன் பற்றி தெரியுமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ODI போட்டியில் இடம் பெற்ற தமிழக வீரர் நடராஜன் தான் பங்கேற்ற முதல் சர்வதேச போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகளை எடுத்து அனைவரின் நம்பிக்கையையும் பூர்த்தி செய்திருக்கிறார்.

AUS vs IND: 3வது ODI இல் விளையாடும் தமிழக வீரர் நடராஜன் பற்றி தெரியுமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் (ODI) இந்திய அணியின் கள வீரர்களில் தமிழக வீரர் நடராஜன் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சிட்னியில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் முறையே 66 ரன் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி, தற்போது தொடரையும் வென்றுவிட்டது.

தற்போது தான் பங்கேற்ற முதல் சர்வதேச போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகளை எடுத்து அனைவரின் நம்பிக்கையையும் நடராஜன் பூர்த்தி செய்திருக்கிறார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் களம் காணும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கான்பெர்ராவில் (Canberra) உள்ள மனுகா ஓவல் (Manuka Oval), மைதானத்தில் இன்று  நடக்கிறது. ஆறுதல் வெற்றியை பெறும் நோக்கில் இந்திய அணி இந்தப் போட்டியை  எதிர்கொள்கிறது. 

கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக தனது முதல் வெற்றிப்பயணத்தை துவங்கியிருக்கும் தமிழக வீரர் திரு.நடராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு ODIகளில் இந்திய பெளலர்கள் ஏமாற்றம் அளித்த நிலையில், மூன்றாவது போட்டியில் நடராஜன் விளையாடவிருக்கும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான தமிழக வீரர் மீது அனைவரின் கவனமும் குவிந்திருக்கிறது.

ஐபிஎல் தொடரில் கலக்கிய தமிழக வீரர் நடராஜன், நடராஜன் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தங்கராசு நடராஜன் (Thangarasu Natarajan). அரசு பள்ளியில் படித்த நடராஜன், முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றவர்.  

Also Read | ரோஹித் ஷர்மாவுக்கு சிக்கல், கோலி, சாஸ்திரியுடன் BCCI ஆலோசனை

முதலில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் விளையாட ஆரம்பித்த நடராஜன், 2015-16 இல் பெங்கால் அணிக்கு எதிராக தமிழ்நாடு அணிக்குள் நுழைந்தார். டி.என்.பி.எல். தொடரிலும், ரஞ்சி கோப்பையிலும் அவர் நன்றாக விளையாடியதால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி (Kings XI Punjab), ஐபிஎல் (Indian Premier League) போட்டிகளுக்காக நடராஜனை அணியில் இணைத்துக் கொண்டது. 

பிறகு, 2018 ஆம் ஆண்டிலிருந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் (Sunrisers Hyderabad) அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜன், இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மூன்றாவது ஒரு நாள் போட்டிகளில் இணைந்திருக்கிறார்.

Also Read | AUS vs IND on Shreyas: இந்தியாவின் சொதப்பலுக்கு காரணம் இதுதான்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Read More