Home> Spiritual
Advertisement

2 கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறும் வரும் வாரம் ராஜயோகம் பொற்காலம் என குஷியாகும் ராசிகள்!

Weekly Horoscope 2024 September 16 - 22 in Tamil: வரும் வாரத்தில் திங்கள் முதல் ஞாயிறு வரையிலான 7 நாட்கள் எந்த ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்... அறிவோம் வார ராசிபலன்...

2 கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறும் வரும் வாரம் ராஜயோகம் பொற்காலம் என குஷியாகும் ராசிகள்!

திங்கட்கிழமை தொடங்கும் வரும் வாரம் செப்டம்பர் 16 முதல் 22ம் தேதி வரை ஒரு வாரத்தில் ஜோதிட ரீதியாக பல மாறுதல்கள் நடைபெறவிருக்கின்றன. சூரிய பெயர்ச்சி மற்றும் புதன் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இவை, 12 ராசியினரின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். வரும் வாரம் யாருக்கு எப்படி இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்.

மேஷம் 
கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும், செலவுகளை குறைக்க முயற்சி செய்யுங்கள். அது தொடர்பாக சிந்தித்து செயலாற்றினால், நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். அனுபவத்தால் பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகளை ஏற்று நடந்தால் நிம்மதி கிடைக்கும். உங்களுடைய பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து நடந்துக் கொண்டால் வாழ்க்கை இனிக்குக்ம்.

ரிஷபம்
உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சேவை துறைகளில் இருப்பவர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டிற்குக் விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும்.   புத்துணர்ச்சி கொடுக்கும் விஷயங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். எதிர்வரும் வாரம் உங்களுக்கு நல்லதாக இருக்கும்.

மிதுனம்
பயணங்களின் மூலம் அலைச்சல் உண்டாகும். சகோதரர்களுடனான் உறவில் சிக்கல் ஏற்படலாம். விளையாட்டு தொடர்பான துறைகளில் பணிபுரிபவர்களுக்கு பொறுமை வேண்டும். திட்டமிட்ட பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் ஏற்படுவது மனதில் சோர்வை ஏற்படுத்தினாலும், பொறுமையாக இருப்பது நல்லது. மின்சார சாதனங்களை பயன்படுத்துவதில் கவனம் வேண்டும்.  

கடகம்
புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். சொத்து தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வீட்டில் சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வருவாயை மேம்படுத்தும் உங்கள் எண்ணம் நிறைவேறும். கவலையை கைவிட்டு, உழைப்பை நம்பினால் முன்னேற்றத்தில் தடையே இருக்காது.

மேலும் படிக்க | சனீஸ்வரரின் நட்சத்திரப் பெயர்ச்சியால் பிரச்சனை தான்! கவலையில் கண்ணீர் விடப்போகும் ராசிகள்!

சிம்மம்
ஞாபக மறதி தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். இதுவரை உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும் காலம் இது. சிந்தனைப் போக்கில் திடீரென்று மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும்.  

கன்னி
பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும் வாரம் இது கன்னி ராசிக்காரர்களுக்கு கடன் தொடர்பான நெருக்கடிகள் அதிகரித்தாலும், சிந்தித்து செயல்பட்டால் எல்லாம் நன்மையில் முடியும். அரசுத் துறையில் பணியாற்றுபவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்கவும். புதிய அறிமுகங்களை நம்பி எந்த விஷயத்தையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.  

துலாம் 
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழும் காலம் இது. பொருட்களால் ஆதாயம் ஏற்படும். வீடு வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும், முக்கியமான செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். உங்களுடைய பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் என்றாலும், நமது வேலையை நாமே முடிப்பது தான் சிறப்பு.  

விருச்சிகம் 
திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும் காலம் இது. வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். தேவைகளுக்கு ஏற்ப செலவு செய்தால் போதும், வேலையாட்களின் ஒத்துழைப்பு தேவைப்படும் காலம் இது, எனவே அவர்களுடன் இணக்கமாக நடந்துக் கொள்ளுங்கள்.

தனுசு 
வாக்கு சாதுரியம் அதிகரிக்கும், அது நினைத்த காரியங்களை செய்து முடிக்க உதவும். நிதி நிலைமை ஏற்ற, இறக்கமாக இருக்கும். நட்பு வட்டாரங்கள் உங்கள் நலனை பாதுகாக்கும். பொன், பொருள் சேர்க்கை மனதில் மகிழ்ச்சியை உருவாக்கும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கையை அதிகரிக்கும் சம்பவங்கள் நடைபெறும்.

மேலும் படிக்க | சந்திர கிரகணத்தன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

மகரம்
சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிக்கும் வாரமாக இருக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் தோன்றும் என்றாலும், அதை நினைத்து அதிக கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எதிர்பார்த்த பண வரவுகள் வந்து சேரும். சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் மனதை புண்படுத்தாமல் அனுசரித்து நடந்து கொள்ளவும்.  

கும்பம்
ஆடம்பரமான மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும் என்றாலும், ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். விரய காலம் என்பதால், இப்படி செலவு செய்துவிட்டால் அது அசுப செலவுகளை இழுத்துவிடாது. பங்குத் துறையில் முதலீடுகள் செய்யும்போது கவனம் தேவை. எதிர்பாராத திடீர் பயணங்கள் மகிழ்ச்சியைத் தரும்.

மீனம் 
துரிதமான செயல்பாடுகளின் மூலம் வளர்ச்சியும் முன்னேற்றமும் சாத்தியமாகும். உயர் கல்வி பயில விரும்புபவர்களுக்கு சாதகமான நேரம் இது. பொருளாதார பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தேவையற்ற குழப்பம் நீங்கும், தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | புதன் வலுவிழந்தா என்ன? சிம்மத்தில் சூரியன் சும்மா விட்டுடுவாரா? 4 ராசிகளுக்கு பொற்காலம் தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More