Home> Spiritual
Advertisement

சனியின் சக்திவாய்ந்த என்ட்ரி... சகல செல்வத்தையும் பெறப்போகிறது இந்த 3 ராசிகள்!

Shani Powerful Transit: சனி பகவான் வரும் மார்ச் 18ஆம் தேதி, அவரது சொந்த ராசியான கும்பத்தில் மிகவும் சக்திவாய்ந்த வகையில் சஞ்சரிக்க உள்ளார்.

சனியின் சக்திவாய்ந்த என்ட்ரி... சகல செல்வத்தையும் பெறப்போகிறது இந்த 3 ராசிகள்!

Shani Powerful Transit: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி அறிகுறிகள் அவ்வப்போது மாறுவது பல ராசிக்காரர்களுக்கு சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது. ராசி அறிகுறிகளின் சொந்தக்காரர்களுக்கு கிரகங்களின் இயக்கத்தின் தாக்கம் நேர்மறை மற்றும் எதிர்மறை வடிவத்தில் காணலாம். 

வரும் மார்ச் 18 ஆம் தேதி, சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் சக்திவாய்ந்ததாக சஞ்சரிக்க உள்ளார். இதன் போது, 3 ராசிக்காரர்களுக்கு சனி அருள் பொழிவார். இந்த காலகட்டத்தில், இந்த ராசிக்காரர்கள் செல்வம் மற்றும் முன்னேற்றம் பெற வாய்ப்புள்ளது. இந்த ராசிகளின் பலன்கள் குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.

மகரம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனியின் சக்தி மகர ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை மாற்றியமைக்கப்போகிறது. இந்த நேரத்தில் வீட்டின் நிதி வலுவாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நிதி ஒத்துழைப்பும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மன உளைச்சலில் இருந்து விரைவில் விடுபடுவீர்கள். தன்னம்பிக்கை கூடும். சனியின் சக்திவாய்ந்த வருகை இந்த நேரத்தில் கடின உழைப்பின் பலனைத் தரும். முதலீடு மூலம் லாபம் கிடைக்கும். வியாபாரம், இரும்பு, எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டு. இதுமட்டுமின்றி இந்த ராசிக்காரர்களுக்கு வரும் 3 மாதங்கள் மிகுந்த பலனை அளிக்கப்போகிறது.

மேலும் படிக்க | காரடையான் நோன்பு: விரதமுறை, பூஜை செய்ய நல்ல நேரம் எது?
    
கும்பம்

இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் சக்திவாய்ந்த வருகை சாதகமாக அமையப்போகிறது. சனி தனது சொந்த ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். அதாவது, கும்பம் அவரது சொந்த ராசியாகும். சனி உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தில் ஷஷ மகாபுருஷ் ராஜயோகத்தை உருவாக்கப்போகிறார். இந்த நேரத்தில், நீங்கள் மரியாதை பெறுவீர்கள். திருமண வாழ்க்கையிலும் பிரச்சனைகள் வரலாம். வியாபாரம் சனி கிரகத்துடன் தொடர்புடையதாக இருந்தால், லாபம் இருக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இனிவரும் காலம் சாதகமாகவே இருக்கும். சனி உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தில் கேந்திர திரிகோண ராஜயோகத்தை ஏற்படுத்தப் போகிறார். இத்தகைய சூழ்நிலையில், ஆன்மீகம், சிந்தனையாளர்கள், ஆராய்ச்சிகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் போன்றவர்களுக்கு இந்த நேரம் நல்லது. இதனுடன், பங்குச் சந்தை, பந்தயம் மற்றும் லாட்டரி போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்வதற்கும் இந்த நேரம் சாதகமானதாகக் கூறப்படுகிறது. காதல் விவகாரங்களில் வெற்றி பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | தினசரி ராசிப்பலன் - இன்று அதிஷ்டம் பெறப்போகும் ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More