Home> Spiritual
Advertisement

இந்த 5 ராசிகளின் அதிர்ஷ்டம் மூன்று நாட்களுக்குப் பிறகு பிரகாசிக்கும்

Grah Rashi Parivartan: சூரியனும் புதனும் இணைந்து புத்தாதித்ய யோகம் உருவாகும். ஜனவரி 27, 2023 அன்று, புதன், சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை அரங்கேறும். இதனால் இது சில ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும்.

இந்த 5 ராசிகளின் அதிர்ஷ்டம் மூன்று நாட்களுக்குப் பிறகு பிரகாசிக்கும்

ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது 12 ராசிகளையும் பாதிக்கிறது. கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கும். கிரகங்களின் தொடர்பு காரணமாக ராஜயோகம் உருவாகும்போதும் அனைத்து ராசிகளும் பாதிக்கப்படும். அதன் பலன் சில ராசிக்காரர்களுக்கும் சுபமாக இருக்கும். இந்த ராஜயோகங்களில் ஒன்று சூரியன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் உருவான புதாதித்ய யோகமாகும். அந்தவகியில் ஜனவரி 27, 2023 அன்று, புதன், சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை அரங்கேறும். அத்துடன் புதன் மற்றும் சூரியன் சேர்ந்து புத்தாதித்ய யோகத்தை உருவாக்கும். இதனால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கும். அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்துக்கொள்வோம்.

மேஷம்
இந்த ராசிக்காரர்களுக்கு புத்தாதித்ய யோகம் மிகவும் சிறப்பாக அமையும். இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பதவியைப் பெறலாம். இந்த நேரத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும், உங்கள் வருமானமும் அதிகரிக்கும். பண ஆதாயமும் உண்டாகும்.

மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!

மிதுனம்
மிதுன ராசியினருக்கு புத்தாதித்ய யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. தடைபட்ட உங்களின் வேலைகள் முடிவடையும். புதிய வேலையைத் தொடங்க நினைத்தால் அதுவும் நிறைவேறும். இந்த நேரத்தில் உங்களுக்கு நிதி சிக்கல்கள் இருக்காது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு புத்தாதித்ய யோகம் மிகவும் உகந்தது. உங்கள் வருமானம் உயரும் வாய்ப்புகள் உள்ளன. இது தவிர, பதவி உயர்வையும் காணலாம். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. உடல் ஆற்றல் நிரம்பியிருக்கும்.

தனுசு
இந்த ராஜயோகம் உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் தரும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். தூசி ஒவ்வாமை உள்ளவர்கள், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்
புதன், சூரியன் சேர்க்கை கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். உங்கள் பதவி உயர்வுக்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் நம்பிக்கை உச்சத்தில் இருக்கும். வெளிநாட்டில் வியாபாரம் செய்தால் லாபம் இரட்டிப்பாகும். உங்கள் உடல்நிலை குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

(பொறுப்பு துறப்பு:  இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே. ZEE NEWS எந்த வகையான அங்கீகாரத்தையும், தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. எந்தவொரு தகவலையும் அல்லது நம்பிக்கையையும் செயல்படுத்துவதற்கு முன், தொடர்புடைய நிபுணரை அணுகவும்.)

மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More