Home> Spiritual
Advertisement

இன்னும் 4 நாட்களில் இந்த 3 ராசிகளுக்கு பிரச்சனை ஆரம்பம்

Budh Gochar 2022: ஆகஸ்ட் 21 அன்று புதன் கிரகம் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழையப் போகிறது. இதனால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நாட்கள் தொடங்கப் போகிறது.

இன்னும் 4 நாட்களில் இந்த 3 ராசிகளுக்கு பிரச்சனை ஆரம்பம்

நமது சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றிக் கொண்டே இருக்கும். அவரது இந்த ராசி மாற்றம் 12 ராசிகளிலும் பெரிய விளைவையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும். இந்த (பெயர்ச்சி) புதன் சஞ்சாரத்தால், சில ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிராகாசிக்கும், அதேபோல் சிலருக்கு கெட்ட நாட்களையும் சந்திக்க நேரிடும். அந்தவகையில் இன்னும் 4 நாட்களில் அதாவது ஆகஸ்ட் 21 முதல் புதன் கிரகம் தனது ராசியை மாற்றப் போகிறது. இவந்த ராசி மாற்றம் இந்த நேரத்தில், மூன்று ராசிக்காரர்களுக்கு கெட்ட நாட்களை ஏற்படுத்தி தரும். எனவே அந்த மூன்று ராசிக்காரர்கள் எவை என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்வோம்.

இந்த ராசிக்கு சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது

கும்பம்: புதன் கிரகத்தின் இந்த ராசி மாற்றத்தில், கும்ப ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமடையலாம் அல்லது விபத்துக்குள்ளாகலாம். முடிந்த வரை, வெளி உணவு சாப்பிடுவதை தவிர்க்கவும். உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள் மற்றும் வாகனத்தின் வேகத்தைக் கட்டுக்குள் வைத்திருங்கள். சாலையில் பெரிய வாகனங்களை ஓட்டுவதை தவிர்க்கவும். அதேபோல் சண்டை சச்சரவுகளைத் தவிர்த்து மென்மையாக நடந்துகொள்ள முயற்சிக்கவும். 

மேலும் படிக்க | சிம்மத்தின் இணையும் சூரியன் - சுக்கிரன்; இந்த ‘4’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்! 

நிதி நெருக்கடிகளால் சிரமப்படலாம்

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் இந்தப் பெயர்ச்சியின் போது பொருளாதாரச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். வருமானத்தை விட இவர்களின் செலவுகள் அதிகமாகி பல இடங்களில் தேவையில்லாமல் செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொள்ள நேரிடலாம்.

fallbacks

பிள்ளைகளின் கல்வியில் அக்கறை அதிகரிக்கும்

மேஷம்: புதன் கிரகத்தின் ராசி மாறுவதும் மேஷ ராசிக்கு மோசமான பலனைத் தரும். பிள்ளைகளின் கல்வியில் கவலை அடைவீர்கள். படிப்பில் இருந்து அவர்களின் மனம் அலைபாயலாம், அதனால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். குழந்தைகள் கெட்ட சகவாசத்தில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. முடிந்தால், இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு அதிக நேரம் கொடுத்து படிக்கத் தூண்டுங்கள்.

ஆகஸ்ட் 21 ஆம் தேதி அரிய யோகம் நிகழ்கிறது

புதன் கிரகம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி அதிகாலை 1:55 மணிக்கு தனது சொந்த ராசியான கன்னி ராசி இல் நுழைகிறது. இதன் போது குரு முதல் ஏழாம் வீட்டில் புதன் கிரகம் இருப்பதால் குருவிற்கும் புதனுக்கும் இடையே சமசப்தம யோகமும் உருவாகும். இந்த அபூர்வ யோகத்தால், வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் ஆசை நிறைவேறி, குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | ஆகஸ்டில் கிரகங்களின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு எக்கச்சக்க ஏற்றம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More