Home> Spiritual
Advertisement

வீட்டில் செல்வமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க... ‘இந்த’ பொருட்கள் வீட்டிற்கு அவசியம்..!!

Vastu Tips: வீட்டில் சில பொருட்களை வைத்திருப்பதால் நிதி நெருக்கடிகள் நீங்கி லட்சுமி தேவி நிரந்திரமாக குடியிருப்பாள் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 

வீட்டில் செல்வமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க... ‘இந்த’ பொருட்கள் வீட்டிற்கு அவசியம்..!!

Vastu Tips:அனைவருக்குமே வசதி,  ஆடம்பரம் நிறைந்த வாழ்க்கையை வாழ ஆசை இருக்கும். அனைவருமே பணம் சம்பாதிக்க கடினமாக உழைக்கிறார்கள். பல நேரங்களில் சிலர் வெற்றியை அடைகிறார்கள். எனினும், சிலர் என்ன தான் கடினமாக உழைத்தாலும் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள். இந்நிலையில் வீட்டில் சில பொருட்களை வைத்திருப்பதால் நிதி நெருக்கடிகள் நீங்கி லட்சுமி தேவி நிரந்திரமாக குடியிருப்பாள் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. வீட்டில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் நேர்மறை ஆற்றலை வழங்குவதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் செல்வம் நிறைந்திருக்க வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள்

பணம் நம் வாழ்வில் முக்கியமான காரணிகளில் ஒன்று என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்று. நெருப்பு, நீர், பூமி, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய 5 கூறுகள் பிரபஞ்ச சக்திகளின் கலவை. இவற்றில் சம நிலை இல்லாமல் போனால், வீட்டில் எதிர்மறை சக்திகள் ஆதிக்கம் செலுத்தும். இதனை நீக்க வாஸ்து சாஸ்திரத்தில் (Vastu Tips) கூறப்பட்டுள்ள விஷயங்களை அறிந்து கொள்ளலாம். 

தடைகள் அனைத்தையும் நீக்கும் விநாயகப் பெருமானின் சிலை

வீட்டில் விநாயகப் பெருமானின் சிலை அல்லது படங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, விக்னங்களை நீக்கும் விநாயகனின் அருளால், வாழ்க்கையில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கி, வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். வாஸ்து தோஷங்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும் என்பதோடு வீட்டில் பணத்திற்கு பஞ்சம் என்பதே ஏற்படாது.

மேலும் படிக்க | உத்திரட்டாதியில் வக்ரமடையும் சனி... அடுத்த ஒரு மாதம் கஷ்ட காலம் தான்... சில பரிகாரங்கள் இதோ..!!

குறையாத செல்வத்தை கொடுக்கும் மகாலட்சுமி மற்றும் குபேரரின் படம்

 பணத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், நிதி தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், வீட்டில் மகாலட்சுமி மற்றும் குபேரரின் சிலை அல்லது படத்தை பூஜை அறையில் வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அன்னை மகாலட்சுமி மற்றும் குபேரனின் அருளால் வாழ்க்கையில் பணத்திற்கு பஞ்சம் இருக்காது என்பது ஐதீகம்.

வாஸ்து தோஷங்கள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சியை சேர்க்கும் சங்கு

 வீட்டின் பூஜை அறையில் சங்கு வைப்பது மிகவும் புண்ணிய காரியம் என்கிறது வாஸ்து சாஸ்திரம். சங்கினை பூஜை அறையில் வைப்பது, வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை  கொண்டு வரும். சங்கு வைப்பதால் வாஸ்து தோஷங்கள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

வீட்டிற்கு செல்வத்தை கொண்டு வரும் தேங்காய்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, தேங்காய் வீட்டின் பூஜை அறையில் வைத்திருப்பது  வீட்டில் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது. பகவானுக்கு படைக்க உன்னதமானதாக கருதப்படும் தேங்காய் வீட்டில் மகிழ்ச்சியையும், செல்வத்தையும் கொடுக்கும் என்பது ஐதீகம். வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவில்லாமல் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | தனுசு ராசியை எதிர்த்தால் அழிவுதான்.. கட்டாயம் பிடிவாத குணமுடன் இருப்பார்களாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More