Home> Social
Advertisement

முத்தம் கொடுத்த பெண்ணின் மூக்கை பதம்பார்த்த பாம்பு: வைரல் வீடியோ

முத்தம் கொடுத்த பெண்ணை மலைப்பாம்பை பிடித்து கடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. விலங்குகள் மற்றும் ஊர்வன உள்ளிட்டவைகளிடம் எப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.  

முத்தம் கொடுத்த பெண்ணின் மூக்கை பதம்பார்த்த பாம்பு: வைரல் வீடியோ

பாம்பு வீடியோக்கள் இணையத்தில் நிறைய இருக்கின்றன. நேரில் பார்க்கும்போது பயத்தின் உச்சத்துக்கு செல்லும் மக்கள், வீடியோவில் அடிகடி பார்க்கும்போது விளையாட்டு பொருளாக நினைத்துக் கொள்கின்றனர். இதனால் இந்த மனோநிலையில் பாம்பிடம் செல்லும்போதும் அதனுடைய தாக்குதலில் சிக்கிக் கொள்கின்றனர். பாம்பு  தற்காப்பில் அதிகம் அக்கறையுள்ள ஊர்வன என்பதால், அதனிடம் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இப்போது வைரலாகியிருக்கும் வீடியோவில் ஒரு பெண்ணுக்கு நடந்தது போலத்தான் நடக்கும்.

பூங்காவுக்கு செல்லும்பெண்கள் அங்கு ஊழியர்கள் வைத்திருக்கும் பாம்பை பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர். ஆபத்தான பாம்பை அவர்கள் கையில் வைத்திருந்ததை பார்த்ததும், இது கடிக்காது என்ற மன நிலைக்கு சென்று அதனை கொஞ்ச ஆரம்பித்துவிட்டனர். அதோடு அவர்கள் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. பாம்பை பார்த்து ரசித்த இரண்டு பெண்களில் ஒருவர், உணர்ச்சிவசப்பட்டு அதற்கு முத்தம் கொடுக்க முனைகிறார். ஊழியர்கள் இரண்டுபேர் பாம்பை கையில் பிடித்திருப்பதால் அது எதுவும் செய்யாது என நினைத்துவிட்டார் போலும். ஆனால், முத்தம் கொடுக்க வந்த பெண்ணின் மூக்கையும் வாயையும் நொடியும் தாமதிக்காமல் பிடித்து கடித்துவிடுகிறது பாம்பு. இதனை அந்தப் பெண் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

மேலும் படிக்க | முதலையை கத்தியால் குத்தபோய் கையை இழந்த நபர்: பெரிய அப்பாடக்கரா இருந்தா மட்டும் இந்த வைரல் வீடியோவ பாருங்க

பாம்பு பாய்ந்து கவ்வி கடிக்க தொடங்கியதும் கத்தி கூச்சலிடுகிறார் அந்த பெண். அப்போது உடனிருந்த பெண்ணும், அந்த தோழியை காப்பாற்றுவதற்காக கத்துகிறார். இதனைப் பார்த்த பாம்பு பிடித்திருக்கும் ஊழியர்கள் விரைவாக செயல்ப்பட்டு பாம்பின் தாக்குதலில் சிக்கிய பெண்ணை காப்பாற்ற முயற்சி செய்கின்றனர். ஒருவழியாக தப்பிப் பிழைக்கிறார் அந்தப் பெண். இந்த வீடியோ தான் இப்போது வைரலாகியிருக்கிறது. வீடியோவில் பார்ப்பதுபோலவோ அல்லது யாரேனும் பாம்பை பிடித்து வைத்திருத்தாலோ அது கடிக்காது என்று அர்த்தமல்ல.

பாம்புக்கு எப்போதும் தற்காப்பு புத்தி என்பது இருந்து கொண்டே இருக்கும். தன்னை யாரேனும் அச்சுறுத்துகிறார்கள் என நினைத்துவிட்டால் அடுத்த நொடியே பாம்பு அவர்களை தாக்க தொடங்கிவிடும். மனிதர்கள் அல்லது விலங்கு என யாராக இருந்தாலும் அது விட்டுவைக்காது. இந்த வீடியோவை பார்க்கும்போது உங்களுக்கே அது புரியும். அதனால் பாம்பு உள்ளிட்ட ஊர்வன மற்றும் விலங்குகளிடம் எப்போதும் ஜாக்கிரதையாக இருங்கள். அவற்றுக்கு பகுத்தறியும் அறிவு எல்லாம் இல்லை. எப்போதும் தங்களின் குணாதிசயத்தை விட்டுக் கொடுக்காது. cctvidiots என்ற டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டிருக்கிறது. இதுவரை 2.1 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். பாம்பை முத்தமிடுவது என்பது ஆபத்தை விலைக்கு வாங்குதற்கு சமம் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர். 

மேலும் படிக்க | மதிய லஞ்சே சாப்பிட்டச்சி டா.. இன்னுமா டிராபிக் நகரல? ஷாக்கிங் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More