Home> Social
Advertisement

கம்பி வேலியை கடந்த காவிய காதல் - சத்தமில்லாமல் பொழிந்த முத்த மழை: Viral Video

கம்பி வேலிக்கு இருபுறமும் நாய் மற்றும் குதிரை இருந்தாலும் இரண்டு விலங்குகளும் தங்களின் அன்பை வெளிகாட்டிக் கொள்ளும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.  

கம்பி வேலியை கடந்த காவிய காதல் - சத்தமில்லாமல் பொழிந்த முத்த மழை: Viral Video

காதல் எல்லை என்று கேட்டால் உலகமே என்ற பதில் தான் பலரிடமும் வரும். எங்கும் வியாபித்திருக்கும் காதல் மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்திலும் காதல் சின்னங்களை பார்க்கலாம். தேனீக்கள் செடிகள் மீது கொண்ட காதலால் தான் பூக்கள் அரும்புகின்றன. சூரியனின் மீது பகல் கொண்ட காதலால் வெளிச்சம் பிறக்கிறது. மொழி மீது கவிஞன் கொண்ட காதலால் கவிதை பிறக்கிறது. இப்படி பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஏனென்றால் இந்த உலகத்தில் காற்று இருக்கும் இடத்தில் எல்லாம் காதல் இருக்கிறது. அன்பின் பார்வை கொண்டு பார்ப்பவர்களுக்கு காதல் அழகாகவும், அவை இருக்கும் இடமும் தெளிவாக தெரியும்.

மேலும் படிக்க  | பாட்டு பாடும் பாறை: தட்டினால் ஒலி கேட்கும் அதிசயம்...வைரலாகும் வீடியோ

மனிதர்களுக்கு இடையே இருக்கும் முரண்பாடு எண்ணங்களுக்கு மருந்து காதல். இது எப்போது மலர்கிறதோ அங்கே மகிழ்ச்சியும் அன்பும் தாண்டவமாடும். காதலுக்கு ஒரு எல்லை இல்லை. வரையறை இல்லை. யாருக்கும் யார் மீது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் காதல் பிறக்கும். அதன் பொருளும், அதற்கான கற்பிதங்களையும் இந்த உலகம் அவரவர் பார்வையில் சுமத்திக் கொள்ளுமே தவிர, அந்த உள்ளங்களுக்கு இடையே காதல் காதலாகவே இருக்கும். அப்படியான அழகிய காதல் வீடியோ இப்போது இணையத்தை பரவசம் அடைய செய்திருக்கிறது. அந்த காதல் நாய் ஒன்றுக்கும் குதிரைக்கும் இடையேயானது. சிலருக்கு இதைக் கேட்டவுடன் வியப்பு கூட வரலாம். நாயும் குதிரையும் காதலிக்குமா என்று?. அன்பின் அடிப்பொருள் தான் காதல் என்பதால், இரண்டும் தங்களின் நேசங்களை ஒருவர் மீது ஒருவர் பரிமாறிக் கொள்கின்றனர்.

மனிதன் இட்ட கம்பி வேலி அவர்களை பிரித்தாளும் இடத்தில் இருந்தாலும் அன்பு என்ற இடைவெளி மூலம் கிடைத்த வாய்ப்பில் தங்களின் அன்பை இரண்டும் தெளித்துக் கொள்கின்றன. இந்த வீடியோ காண்போருக்கு பரவசம் கூட கொடுக்கலாம். நாய் மற்றும் குதிரை இரண்டும் கம்பிவேலிக்கு எதிரெதிர் பக்கங்களில் இருக்கின்றன. நாய் ஒருபுறமும், குதிரை ஒருபுறமும் இருக்க, இடையே கம்பிவேலி இருக்கிறது. இருந்தாலும், அங்கே அன்பின் மிகுதியால் தங்களின் முகங்களை ஒன்றின் மீது ஒன்று தேய்த்து, நேசத்தை பறிமாறிக் கொள்கின்றன. இன்ஸ்டாகிராமில் animalsonland என்ற பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றிருக்கிறது. வீடியோவை பார்த்த பலரும் அன்பிற்கு அடையாளமாக இந்த வீடியோ இருப்பதாக மெச்சியுள்ளனர். 

மேலும் படிக்க | மரத்தில் இருந்து கொட்டும் தண்ணீர்: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More