Home> Social
Advertisement

இந்த பாம்புக்கு சொகுச பாத்திங்களா.. பார் மேனஜர் அலறல்: வீடியோ வைரல்

இந்த வீடியோவில், மேசை டிராயரில் பாம்பு சுருண்டு இருப்பதை நாம் காணலாம். இந்த வீடியோவை கடைசி வரை கண்ட இணையவாசிகள் சிலர் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த பாம்புக்கு சொகுச பாத்திங்களா.. பார் மேனஜர் அலறல்: வீடியோ வைரல்

இன்றைய வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு கிரேஸ் உள்ளது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு முக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒரு உயிரினமாக கருதப்படுகின்றன. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இவற்றைப் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக இருப்பது இயற்கையானது. அதன்படி பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

மேலும் படிக்க | காட்டுக்குள் சென்ற பெண்களை கட்டிப்பிடிச்ச கரடி: வைரல் வீடியோ

அந்தவகையில் சமீபத்திலும் ஒரு பாம்பு வீடியோ பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது. இதில் மேசை டிராயரில் பாம்பு சுருண்டு இருப்பதை நாம் காணலாம். இந்த வீடியோவை கடைசி வரை கண்ட இணையவாசிகள் சிலர் அதிர்ச்சியடைந்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு பார் ஒன்றில் மேனஜர் ஒருவர் இருந்துள்ளார். அப்போது அவரது பணி நேரம் முடிந்ததும், அங்கு இருந்த தனது மேஜையின் ட்ரையரில் பொருள் ஒன்றை வைக்க திறந்துள்ளார். அப்போது அதில் பச்சை நிறத்தில் பாம்பு ஒன்று சுருண்டு இருப்பதை அவர் கண்டுள்ளார். இதனையடுத்து டென்ஷனான பார் மேனஜர் அலறி அடித்து அங்கிருந்து ஓடியுள்ளார்.

பின்னர் இதுகுறித்து வன அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதன் பேரில் வன அதிகாரிகள் விரைந்து வந்து, சுருண்டு படுத்து ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்த பாம்பை பிடித்து சென்றனர். இதுகுறித்து நபர் ஒருவர் புகைப்படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "ஒரு வளாகத்தின் மேலாளர் நாள் முழுவதும் தனது மேசையில் வேலை செய்து கொண்டிருந்தார், நேரம் முடிந்தவுடன் அவர் தனது டிராவைத் திறக்க நேர்ந்தது, அப்போது உள்ளே ஒரு பாம்பு இருப்பதைக் கண்டதும் அவர் அச்சமடைதார்." என்று பதிவிட்டு இருந்தார். தற்போது இந்த புகைப்படும் மற்றும் வீடியோ இணையதளத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.

பாம்பு ரெஸ்ட் எடுக்கும் வீடியோவை இங்கே காணலாம்: 

இந்த வைரலான வீடியோவை பல லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் பெற்றுள்ளது மற்றும் ஆயிரக்கணக்கானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை நேஷனல் ஜியோகிராஃபிக் சேனலில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | Viral Video: காணக் கிடைக்காத அதிசய காட்சி.. கூடு கட்டும் குருவி..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More