Home> Social
Advertisement

கூப்பிட்டு வச்சு அசிங்கபடுத்தறாங்க... கடுப்பில் நாய்குட்டி... குஷியில் முயல் குட்டிகள்!

சமூக ஊடக தளத்தில் பகிரப்படும் செல்லப் பிராணிகளின் வீடியோக்கள் மிகவும் அதிகம் விரும்பப்பட்டு, அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகும். செல்லப் பிராணிகள் என்றாலே, அவை தினமும்  நமக்கு தினம் தினம் மகிழ்ச்சியும் சுவாரசங்களையும் அள்ளிக் கொடுக்கும்.

கூப்பிட்டு வச்சு அசிங்கபடுத்தறாங்க... கடுப்பில் நாய்குட்டி... குஷியில் முயல் குட்டிகள்!

சமூக ஊடகங்கள் தகவல்களின் களஞ்சியங்களாக உள்ளன என்றால் மிகை இல்லை. ஏனென்றால் அவை தினம் தினமும் நமக்கு பல்வேறு செய்திகளையும் தகவல்களையும் அள்ளிக் கொடுக்கும் ஒரு சிறந்த ஊடகமாக இருக்கின்றன. அந்த தகவல்கள் நமக்கு பல அரிய செய்திகளையும் காட்சிகளையும் கொண்டு வந்து சேர்க்கின்றன. இணையதளத்தில் பகிரப்படும் சில வீடியோக்கள் நமக்கு தகவல்களோடு, நமது மன அழுத்தத்தை தீர்க்கும் மருந்துகளாகவும் இருக்கின்றன எனலாம். சமூக ஊடக தளத்தில் பகிரப்படும் செல்லப் பிராணிகளின் வீடியோக்கள் மிகவும் அதிகம் விரும்பப்பட்டு, அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகும். செல்லப் பிராணிகள் என்றாலே, அவை தினமும்  நமக்கு தினம் தினம் மகிழ்ச்சியும் சுவாரசங்களையும் அள்ளிக் கொடுக்கும்.நாய் பூனை முயல்கள் ஆகியவை நம்மை பரவசப்படுத்துவதில் வல்லவை. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

விருந்துக்கு போன இடத்தில் நமக்கு பிடிக்காத உணவு கொடுக்கப்பட்டால் எப்படி இருக்கும்... அப்படிப்பட்ட நிலையில் தான் இந்த நாய் உள்ளது. பாவம் இந்த நாய் சாப்பிட முடியாமல், பக்கத்தில் இருக்கும் முயலை பார்த்து பரிதாபமாக தவிப்பது நமக்கு உண்மையில் சிரிப்பை வர வைப்பதாக இருக்கிறது. வைரல் ஆகி வரும் வீடியோவில் (Viral Video), நாய் ஒன்றின் அருகே அமர்ந்திருக்கும் இரண்டு முயல்கள், வெள்ளரிக்காய் சக்கை போடு போடுவதை காணலாம். அதனை பக்கத்தில் இருக்கும் நாய், ஒன்றும் செய்ய முடியாமல் பாவமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. நாய்கள் தாவர உணவுகளை சாப்பிடும் என்றாலும், அசைவமும் அதற்கு மிகவும் பிடிக்கும். வீடியோவில் காணப்படும் நாய் அசைவம் மிகவும் பிடித்த நாய் போலிருக்கு. அதனால் தான் அது வெள்ளரிக்காயை சாப்பிட முடியாமல் பரிதாபமாக பார்க்கிறது.

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:


தாவர வகைகளை உண்ணும் சவை இனமான முயல், தனக்கு கிடைத்த வெள்ளரிக்காயை சுகமாக உண்ணும் போது, முயல் உலகின் பல பகுதிகளிலும் காணப்படும் ஒரு பாலூட்டி விலங்காகும். குடும்பமாக வாழும் இவை தாவர உண்ணிகளாகும். முயல்கள் பார்க்க அழகாக இருக்கும். அவற்றின் நிறம், மினுமினுக்கும் கண்கள், சுறுசுறுப்பு, நீண்ட காதுகள் ஆகியவை அனைவரையும் ஈர்க்கக் கூடியவை. பலர் முயலை தங்கள் குடும்ப உறுப்பினரைப் போல நேசிக்கிறார்கள். எந்த சூழ்நிலையிலும் நம்மை விட்டு விலகாது இந்த முயல். நாயும் செல்ல பிராணிகளாக அதிகம் வளர்க்க கூடியது. . இவை நன்ற மறவாதவை. தனது எஜமானருக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பவை.

மேலும் படிக்க | Viral Video: யூ டர்ன் எடுக்கிற இடமா இது.... ஆனாலும் ட்ரைவருக்கு ஒரு சல்யூட்...!!

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

Read More