Home> Social
Advertisement

புலியின் காதை கடித்து காதல் வளர்க்கும் கரடியின் வீடியோ வைரல்

புலியின் காதை கடித்து காதல் வளர்க்கும் கரடியின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் கரடியும் புலியும் சேர்ந்திருக்கும் காட்சி காண்போரை வியக்க வைக்கிறது.   

புலியின் காதை கடித்து காதல் வளர்க்கும் கரடியின் வீடியோ வைரல்

விலங்குகளிடையே இருக்கும் பாசம் பிணைப்பு மனிதர்களுக்கு மிகப்பெரிய பாடமாக இருக்கும். அவைகளுக்கு வேட்டை தான் உணவு என்றாலும், சில சமயங்களிம் அவை மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும் போக்கு, விலங்குகள் கூட இப்படி நடந்து கொள்ளுமா? என்ற எண்ணத்தையும், வியப்பையும் உண்டாக்கும். தன் இனம் கடந்த பாசம், பரிவு ஆகியவற்றை விலங்குகள் கொடுக்கும். குறிப்பாக தீரா பசியில் இருக்கும் சிங்கம் மற்றும் புலி உள்ளிட்ட விலங்குகள் வேட்டையாட வரும்போது, குட்டி மான்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை வேட்டையாடாமல் தவிர்த்துவிட்டு செல்லும் வீடியோக்கள் இன்றளவும் ஏராளமாக உள்ளன.

மேலும் படிக்க | என்னடா வயித்துக்குள்ள..நடுரோட்டில் தவிக்கும் 20 அடி மலைப்பாம்பு..வீடியோ வைரல்

அதுபோன்ற ஒரு வீடியோ தான் இப்போது டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. கரடியும் புலியும் காதல் கொண்டிருக்கும் அந்த வீடியோ காண்போரை நேசிக்க வைக்கிறது. வார்த்தை ஜாலத்துக்காக அவை காதல் கொண்டிருப்பதாக கூறப்பட்டாலும், நட்பு ரீதியில் அந்தளவுக்கு கரடிக்கும் புலிக்கும் இடையே அந்யோன்யம் இருக்கிறது. இரண்டும் அருகருகே படுத்துக் கொண்டு கொஞ்சிக் கொள்ளும் வீடியோ பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது. இந்த வீடியோ காட்டில் எடுக்கப்பட்டது அல்ல. விலங்குகள் சரணாலயத்தில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த சரணாலயத்தில் வளர்ந்த இரண்டு விலங்குகளும் பாசமாக இருக்கும்போது, இந்த வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருக்கிறது. இதுபோன்ற இன்னும் சில வீடியோக்கள் கூட இருக்கின்றன. சரணாலயத்தில் வளரும் புலிக்குட்டியை வாத்து ஒன்று துரத்தி துரத்தி கொத்தும் காட்சி அண்மையில் வைரலானது. அப்போது கூட சிலர், புலிக்குட்டியை வாத்து கொத்துவதை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. வாத்துக்கு பயந்து புலிக்குட்டி இப்படி ஓடுவதை முன்பின் பார்த்ததில்லை என்றெல்லாம் கூறியிருந்தார்கள். சரணாலயத்தில் வளரும் விலங்குகளுக்கு தன்னியல்பு என்பது மறந்து தான் இருக்கும். அதனால் தான் இப்படியான வேடிக்கை சம்பவங்களை பார்க்க முடிகிறது. அதுவே காடு என்றால் புலியின் அருகில் வாத்து மற்றும் கரடி எல்லாம் வருமா?. யோசித்து பார்த்தால் இந்த உலகம் எவ்வளவு வேடிக்கையாகவும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.   

மேலும் படிக்க | சாக்லெட் திருட வந்த குட்டி திருடன் - திகைத்துப்போன கடை உரிமையாளர்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More