Home> Social
Advertisement

‘ஏய்.. ஃபேர்வெல்லா இது?’ மாணவர்கள் கொடுத்த வினோதமான பிரியாவிடையின் வைரல் வீடியோ

Viral Video: பிறந்தநாள் கொண்டாட்டங்களில் சிறுவர்கள் ஒருவர் மீது ஒருவர் கேக் பூசி விளையாடுவதை நாம் பார்த்துள்ளோம். ஆனால், ஒரு ஆசிரியருக்கு அளிக்கப்படும் பிரியாவிடை, அதாவது ஃபேர்வெல்லில் இப்படி நடந்தால் என்ன ஆகும்?

‘ஏய்.. ஃபேர்வெல்லா இது?’ மாணவர்கள் கொடுத்த வினோதமான பிரியாவிடையின் வைரல் வீடியோ

வைரல் வீடியோ: இணையத்தில் வைரலாகும் பல வீடியோக்களில் காட்டப்படும் சில விஷயங்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இவற்றில் பள்ளி மாணவர்கள், சிறு குழந்தைகள் என இவர்களை பற்றிய வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சோகத்தை மறந்து சிரிக்க வைக்கும் பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகின்றன. தற்போதும் அது போன்ற, நெகிழ்ச்சியான, சுவாரசியமான வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றது.

பிறந்தநாளோ அல்லது பிரியாவிடையோ...தருணம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், சபை களைகட்டும் அளவுக்கு நமது நாட்டில் கொண்டாட்டங்கள் இருக்கும். பிறந்தநாள் கொண்டாட்டங்களில் சிறுவர்கள் ஒருவர் மீது ஒருவர் கேக் பூசி விளையாடுவதை நாம் பார்த்துள்ளோம். ஆனால், ஒரு ஆசிரியருக்கு அளிக்கப்படும் பிரியாவிடை, அதாவது ஃபேர்வெல்லில் இப்படி நடந்தால் என்ன ஆகும்?

இது தொடர்பான ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் பிரியாவிடை நிகழ்வின் போது, அந்த  ஆசிரியருக்கு போட்ட வேஷத்தால் அவர் பேய் பிடித்ததை போல் காணப்படுகிறார். 

மேலும் படிக்க | Viral News: கணவனுக்கு முன்னாள் காதலியுடன் திருமணம் செய்து வைத்த காதலி! 

தன்னைப் பார்த்தே பயந்த ஆசிரியர் 

பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு பிரியாவிடை கொடுக்கப்படுவதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. அனைத்து மாணவர்களும் சக ஆசிரியர்களும் சேர்ந்து ஆசிரியரின் முகத்தில் வண்ணத்தை பூசி விடுகிறார்கள். அவரை பார்த்தால் அவருக்கே பயம் வரும் அளவுக்கு அவரை மாற்றி விடுகிறார்கள். தனது ஃபேர்வெல்லில் இவ்வளவு சோகத்துடன் இருக்கும் முதல் ஆசிரியர் இவராகத்தான் இருப்பார் என இணையவாசிகள் கமெண்ட் செய்துள்ளார்கள். 

அழுவதா? சிரிப்பதா? குழம்பும் ஆசிரியர்

வீடியோவில், சில மாணவர்கள் அவருக்காக ஃபேர்வெல் சாங் பாடுவதை காண முடிகின்றது. சில மாணவர்களோ அவரை பார்த்தபடி நின்றுகொண்டு இருக்கின்றனர். பள்ளி தொடர்பான இந்த வீடியோ videonation.teb என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 'அன்பு கொஞ்சம் அதிகமாகிவிட்டது’ என தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.

எனினும், இந்த வீடியோவில், ஆசிரியர் பள்ளியை விட்டு செல்வதால், மாணவர்கள் சோகத்தில் இருப்பது போலவும் தோன்றுகிறது. சில மாணவிகள் முகத்தை மூடிக்கொண்டு அழுவதையும் காண முடிகின்றது. அந்த ஆசிரியரும், பள்ளியையும் மாணவர்களையும் விட்டு செல்ல மனமில்லாமல் அழுவது போல தோன்றுகிறது. ஆனால், அவர் அழுகைக்கான நிஜமான காரணம் இன்னும் சரியாகத் தெரியவில்லை.

இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | நாகப்பாம்பின் தலையை வெட்டி நாகமணியை எடுத்த நபர்: பதற வைக்கும் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More