Home> Social
Advertisement

குரங்கு செஞ்சத பாருங்க... கையில் கத்தி, முகத்தில் கோவம்: வேகமாக டிரெண்ட் ஆகும் வைரல் வீடியோ

Viral Video: விலங்குகளின் வீடியோக்களுக்கு சமூக ஊடகங்களில் அதிக ரசிகர்கள் உள்ளனர். விலங்குகளின் உலகில் நாம் அருகில் சென்று பார்க்க முடியாத பல விஷயங்களை இந்த வைரல் வீடியோக்கள் மூலம் காண்கிறோம். 

குரங்கு செஞ்சத பாருங்க... கையில் கத்தி, முகத்தில் கோவம்: வேகமாக டிரெண்ட் ஆகும் வைரல் வீடியோ

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு சமூக ஊடகங்களில் அதிக ரசிகர்கள் உள்ளனர். விலங்குகளின் உலகில் நாம் அருகில் சென்று பார்க்க முடியாத பல விஷயங்களை இந்த வைரல் வீடியோக்கள் மூலம் நாம் காண்கிறோம். சிங்கம், புலி, குரங்கு, நாய், பூனை ஆகியவை இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். இவற்றின் வீடியோக்கள் பதிவேற்றப்பட்ட உடனே வைரலாகி விடுகின்றன.

குரங்குகளின் வீடியோக்களுக்கு இருக்கும் கிரேசுக்கும் பஞ்சமில்லை. குரங்குகள் செய்யும் கோமாளித்தனமான செயல்கள் மக்களை ஈர்க்கின்றன. சமீபத்திலும் குரங்கின் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. ஆனால் இந்த வீடியோவில் குரங்கு செய்யும் செயல் சற்று ஆபத்தானதாக உள்ளது.

வைரல் ஆகி வரும் குரங்கு வீடியோவை இங்கே காணலாம்:

மேலும் படிக்க | பேய்க்கு பளார் என விழுந்த அடி, சிரிப்பு கேரண்டி - வைரல் வீடியோ

இந்த வீடியோவில் ஒரு குரங்கு தன்னை வைத்து வித்தைக்காட்டி பிழைக்கும் நபரை தாக்குவதை காணமுடிகின்றது. குரங்கின் கோபம் அதன் முகத்தில் அப்பட்டமாக தெரிகின்றது. குரங்கின் கோபத்தைக் கண்டு அங்கிருந்தவர்களும் அச்சத்துடன் அதை பார்ப்பதை வீடியோவில் காண முடிகின்றது. மேலும் குரங்கு கொண்டு வித்தைக்காட்டும் அந்த நபரை அங்கிருந்து செல்லும்படியும் மக்கள் அறிவுறுத்துகிறார்கள்.

குரங்கு வித்தை காட்டுபவர்களின் எண்ணிக்கை இந்த காலத்தில் குறைந்து கொண்டே வருகின்றது. எனினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது இவர்களை காணவும் முடிகிறது. இவர்களிடம் இருக்கும் குரங்குகள் இவர்கள் சொல்லும் படி அப்படியே செய்வதை நாம் பல இடங்களில் பார்த்துள்ளோம். ஆனால் இந்த குரங்கு மிகுந்த ஆத்திரத்துடன் கையில் கத்தியுடன் அந்த நபரை மிரட்டுவதை பார்க்க ஆச்சரியமாக உள்ளது. துள்ளி துள்ளி குரங்கு கோவப்படுவது பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், சற்று அச்சமாகவும் உள்ளது.

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமின் iam_road_king_5399 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் சுமார் 45 ஆயிரம் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

'குரங்கின் செயல் வேடிக்கையாக உள்ளது' என்று ஒரு பயனர் எழுதியுள்ளார். 'இது மிகவும் ஆபத்தான விஷயம்' என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். 'குரங்கின் இந்த கோவத்திற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்க வேண்டும்' என ஒருவர் எழுதியுள்ளார். 

மேலும் படிக்க | மாட்டிடம் கேள்வி கேட்ட சிறுமி..அதுவும் பதில் சொல்லுதே!! செம க்யூட் வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More