Home> Social
Advertisement

புலியுடன் வம்பிழுக்கும் குரங்கு, இவ்வளவு தைரியமா? பிறகு என்ன நடந்தது: வீடியோ வைரல்

Wildlife Video: சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, இதைப் பார்த்து நீங்கள் சிரித்துக்கொண்டே இருப்பீர்கள். காட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இரண்டு புலிகளை குரங்கு ஒன்று என்ன செய்கிறது என்பதைதான் இன்றைய வைரல் வீடியோவில் நாம் காண உள்ளோம்.

புலியுடன் வம்பிழுக்கும் குரங்கு, இவ்வளவு தைரியமா? பிறகு என்ன நடந்தது: வீடியோ வைரல்

புலி மற்றும் குரங்கு இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குரங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். சமூக ஊடகங்களில் குரங்குகள் செய்யும் பல அட்டகாசங்களின் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. குரங்குகளின் மனநிலையை கணிப்பது கடினம். ஒரு சமயம் அமைதியாக இருக்கும் இவை அடுத்த கணமே அட்டகாசம் செய்யத் துவங்கிவிடும். அதனால்தான் அடிக்கடி தன் கருத்தை மாறி மாறி கூறுபவர்களை குரங்கு புத்தி என கூறுகின்றனர்.

மேலும் படிக்க | காட்டு கழுதைகளை காரில் துரத்தும் சுற்றுலாப் பயணிகளின் வீடியோ வைரல்

சாலைகளில் குரங்குகள் செய்யும் அட்டகாசங்களுக்கும் அளவில்லை. சாலையில் நடந்து செல்பவர்களின் பொருட்களை பிடுங்குவது, வழிப்போக்கர்களின் தோளில் சென்று அமர்வது, அவர்கது முடியை பிடித்து இழுப்பது என இவை பல வழிகளில் மக்களை தொந்தரவு செய்கின்றன. கோயில்களில் கூட குரங்குகளிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்கும் படி அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். எனினும், தற்போது வெளிவந்துள்ள ஒரு வீடியோ, சற்று வித்யாசமானது என்றே கூறலாம். இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர். இங்கு ஒரு குரங்கு எப்படி இரண்டு புலிகளை வம்பிழுக்கிறது என்பதை நாம் காண முடிகிறது.

உண்மையில் இந்த காணொளியில் மிகவும் குறும்பு குணம் கொண்ட குரங்கு ஒன்று இரண்டு புலிகளிடம் தனது செத்த தனத்தை காட்டுகிறது. முதலில் தரையில் அமர்ந்திருக்கும் புலிகளின் காதுகளையும், பின்னர் வாலையும் இழுக்கிறது. இதைச் செய்து, அந்த குரங்கு விரைவாக மரத்திற்கு ஓடிவிடுகிறது, இதனால் அந்த புலிகள் குரங்கை ஒன்றும் செய்யமுடியாமல் போகிறது. 

புலிகளிடன் குரங்கு வம்பிழுக்கும் வீடியோவை இங்கே காணுங்கள்:

இந்த வீடியோ @TerrifyingNatur என்ற டிவிட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பயனர்களும் வேடிக்கையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் குரங்கு மற்றும் புலிகளுக்கு இடையே நடக்கும் இந்த சேட்டையை கண்டு மக்கள் என்ஜாய் வருகின்றனர்..

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ’வாடா செல்லம்’ மிட்டாய் பாக்ஸில் ஈஸியாக நாகப்பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர் - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More