Home> Social
Advertisement

போதையில் குடிமகன் செய்த வேலை, கடுப்பான கரடி: வைரல் வீடியோ

Strange Viral Video: மதுபோதையில் ஒரு நபர் செய்த செயல் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதைப் பார்த்தால் ஆச்சரியப்படுவதா அல்லது அச்சப்படுவதா என புரியவில்லை.

போதையில் குடிமகன் செய்த வேலை, கடுப்பான கரடி: வைரல் வீடியோ

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

சமூக ஊடகங்களில் நாம் நம்ப முடியாத வகையில் இருக்கும் பல வீடியோக்கள் அடிக்கடி பகிரப்படுகின்றன. இவற்றை பார்த்தால் நமக்கு ஆச்சரியம் மேலோங்கும். பெரும்பாலும் விலங்குகளின் வீடியோக்களே இதில் அதிகம்.

சமீபத்திலும் அப்படி ஒரு வீனோதமான வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஆனால், இதில் வினோதமாக நடந்துகொண்டது மிருகம் அல்ல, ஒரு மனிதன். எந்த ஒரு சாமானியனும் செய்ய நினைக்காத ஒரு செயலை இந்த வீடியோவில் வரும் நபர் செய்துள்ளார். இதைப் பார்த்த இணையவாசிகளுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒன்றாக ஏற்படுகின்றது.

சமீபத்தில் வெளியான இந்த வீடியோவில், ஒரு நபர் முழுமையாக குடிபோதையில், ஒரு கையில் மதுபானம் நிறைந்த கிளாசும் மற்றொரு கையில் மதுபான பாட்டிலும் வைத்துக்கொண்டு இருப்பது தெரிகிறது. ஆனால், அவர் போதையில் இருந்ததற்காக இந்த வீடியோ வைரல் ஆகவில்லை. மாறாக, போதையில் அவர் செய்த செயலே வீடியோ வைரலாக காரணமாகும். இதனால் இந்த வீடியோ தற்போது பயனர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

மேலும் படிக்க | 'ப்ப்பா.... இப்படி ஒரு பக்தியா?’... இணையத்தை இளக வைத்த குரங்கு, வைரல் ஆன வீடியோ

கரடியின் முதுகில் அமர்ந்து மது அருந்திய நபர் 

பொதுவாக மது அருந்துவது உடல் நலத்திற்கு மிகவும் தீங்கானது. மது அருந்துவதால், பலர் விபத்துக்குள்ளாவதும், பல நேரங்களில் உயிரே பலியாவதும் உண்டு. இதே போன்ற காட்சியை இந்த வீடியோவிலும் பார்க்கிறோம். அந்த நபர் போதையில் அலாஸ்காவில் காணப்படும் ராட்சத கிரிஸ்லி கரடியின் முதுகில் அமர்ந்திருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. இந்த நேரத்தில் கரடியும் மிகவும் கோபத்துடன் காணப்படுகின்றது.

வினோதமான அந்த வீடியோவை இங்கே காணலாம்:

வீடியோ வைரல் ஆனது

வீடியோவைப் பார்க்கும்போது, ​​கரடி மிகவும் கோபமாக இருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் அந்த நபரை தாக்கலாம் என்றும் யூகிக்க முடிகிறது. அத்தகைய சூழ்நிலையில், அந்த நபர் வியக்கத்தக்க வகையில் கரடியின் முதுகில் அமர்ந்திருக்கிறார். அவரிடம் அச்சம் என்ற ஒன்றையே காண முடியவில்லை. 

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. இந்த செய்தியை எழுதும் வரை, இந்த வீடியோ 1.8 மில்லியனுக்கும் அதிகமான, அதாவது சுமார் 18 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் வீடியோவை லைக் செய்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | Viral Video: 100 கிலோ மலைப்பாம்பை தோளில் சுமந்த நபர், கடுப்பில் வாயை பிளந்த Python

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More