Home> Social
Advertisement

ராமர் கோவில் கதவுகளை வடிவமைத்த தமிழ்நாட்டு கலைஞர்கள்! தகதகவென ஜொலிக்கும் அயோத்தி

Ayodhya Ram Temple Gharbhagriha Doors From Tamil Nadu Articians: சரித்திரத்தில் இடம் பெறும் ராமர் கோவிலுக்கு கதவுகளை செய்யும் தமிழ்நாட்டு கலைஞர்கள்....

ராமர் கோவில் கதவுகளை வடிவமைத்த தமிழ்நாட்டு கலைஞர்கள்! தகதகவென ஜொலிக்கும் அயோத்தி

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் மர வேலைப்பாடுகளை மாமல்லபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி ரமேஷ் தலைமையிலான இந்த கைவினைக் கலைஞர்களின் செய்துள்ளனர். மாமல்லபுரத்தை சேர்ந்த இந்த தொழில்முறை வல்லுநர்கள், ராமர் கோவில் கருவறையின் முக்கிய கதவுகள் உட்பட 44 கதவுகளையும் வடிவமைத்துள்ளனர். எலக்ட்ரோபிளேட்டிங் செயல்முறையைப் பயன்படுத்தி கதவுகள் தங்க முலாம் பூசப்படுகின்றன. அழகான மற்றும் நுணுக்கமான செதுக்கப்பட்ட கதவுகள் பல்ஹர்ஷா தேக்கு மரத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளன.

கோவிலின் கருவறையின் வாயிலாக அமைந்துள்ள இந்த கதவுகளை கோவில் குடமுழுக்கு அன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைபபர்.  உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் பணிகளில், ரமேஷ் மற்றும் 20 கைவினைஞர்கள் கொண்ட தச்சர்களின் குழு ஈடுபட்டுள்ளது. நேற்று இந்த கருவறையின் கதவு பொருத்தப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.


கருவறையின் முக்கிய கதவுகள் உட்பட கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சீதா தேவி, லட்சுமணன், அனுமன் மற்றும் பல சன்னதிகளுக்கான 44 கதவுகளும், சென்னைக்கு தெற்கே 60 கிமீ தொலைவில் உள்ள மாமல்லபுரத்தில் இருக்கும் கலைஞர் ரமேஷின் குழுவினரால் வடிவமைக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணியில் உதவுவதற்காக, குழு கடந்த ஆறு மாதங்களாக அயோத்தியில் தங்கியுள்ளது.

மேலும் படிக்க | Ram temple: அயோத்தி ராமர் கோவிலுக்கு இதுவரை எவ்வளவு நன்கொடை கிடைத்துள்ளது?

தமிழர்களின் கலைநயம்

கலைஞர் ரமேஷ் தலைமையிலான 40 பேர் கொண்ட தச்சர் குழு, தங்கள் முன்னோர்களிடமிருந்து மர வேலைப்பாடு மற்றும் கைவினைத் திறனைப் பெற்றுள்ளனர். ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர், சரித்திரத்தில் இடம் பெறும் ராமர் கோவில் கட்டுமானப் பணியின் மரத்திலான கதவுகளை செய்யும் பணியை ஒப்படைத்துள்ளார்.

கோவில் தேர்களுக்கான தூண்கள் மற்றும் கோபுரங்களை மெருகூட்டுவதற்கும், செதுக்குவதற்கும், செதுக்குவதற்கும் சிறந்த கருவிகள் இருந்தாலும், அயோத்தியில் செய்யு பணி உண்மையிலுமே சவாலாக இருந்தது என்று கலைஞர்கள் கூறுகின்றனர். 

மேலும் படிக்க | Pran Pratistha: பிராண பிரதிஷ்டா நிகழ்ச்சிக்கு விராட் கோலி குடும்பத்திற்கு அழைப்பிதழ்

இந்தப் பணியில், கணிதம், படைப்பாற்றல், அழகியல் மற்றும் சிற்ப சாஸ்திரம் அனைத்தும் அழகாக இணைந்துள்ளது வைரல் வீடியோவில் தெரிகிறது. 

500 கிலோ எடையுள்ள எட்டரை அடி உயரமும் 12 அடி அகலமும் நான்கு அங்குல தடிமன் கொண்ட ஒரு கதவை எட்டு பேர் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது கதவின் பிரம்மாண்டத்தை உணரச் செய்கிறது. கருவறையில் யானைகள், பெண்கள், தாமரைகள், மயில்கள் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகள் பொறிக்கப்பட்ட கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

தற்போது, டெல்லியில் இருந்து சென்றுள்ள பொற்கொல்லர்கள் இந்த தேக்கு மரக் கதவுகளுக்கு தங்க முலாம் பூசி வருகின்றனர். உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக மாறப்போகும் அயோத்தி ராமர் கோவிலில் அனைவரையும் வரவேற்பது தமிழக கலைஞர்கள் என்பது தமிழ்நாட்டின் கலை கலாச்சார பாரம்பரியத்திற்கு பெருமை சேர்க்கிறது.

மேலும் படிக்க | அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்... 55 நாடுகளுக்கு அழைப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More