Home> Social
Advertisement

Viral Video: கொண்டையில் ’பூ’ வைத்துக் கொண்ட வாத்துக்குஞ்சுகள்...!

வாத்துக் குஞ்சுகள் இரண்டு தலையில் பூ வைத்தவாறு தண்ணீரில் நீந்திச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

 Viral Video: கொண்டையில் ’பூ’ வைத்துக் கொண்ட வாத்துக்குஞ்சுகள்...!

இணையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே நெட்டிசன்களை மிகவும் கவர்ந்து மற்றவர்களுக்கும் பகிரப்படுகின்றன. அந்தவகையில், டிக்டாக்கில் பதிவிட்ட வாத்துக் குஞ்சுகளின் வீடியோ, இப்போது டிவிட்டர் தளத்திலும் பதிவிடப்பட்டு வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது இரண்டே இரண்டு வாத்துக் குஞ்சுகள் தான். ஆனால், அவை தலையில் பூ வைத்தவாறு தண்ணீரில் நீந்திச் செல்லும் அழகு நெட்டிசன்கள் ஈர்த்துள்ளது.

ALSO READ | ஆசையா ஸ்வீட் கொடுத்த மாப்பிள்ளை, வேற லெவலில் ட்விஸ்ட் கொடுத்த மணப்பெண்: வைரல் வீடியோ

வாத்துக் குஞ்சுகளுக்கு தலையில் எப்படி பூ வைந்திருக்க முடியும்? அந்த வாத்துக் குஞ்சுகளே எப்படி பூ வைத்துக் கொள்ளும்? என்ற கேள்விகள் உங்களுக்கு எழலாம். இந்த வீடியோவை முதன்முதலில் பார்க்கும் அனைவருக்குமே இந்த கேள்வி எழாமல் இருக்க வாய்ப்பில்லை. அந்த கேள்விக்கான பதிலும் வீடியோவிலேயே இருக்கும்.

வளர்ப்பு வாத்துக் குஞ்சுகளான இரண்டும் அகலமான தொட்டி ஒன்றில் விடப்பட்டுள்ளது. அதில் ஏரளாமான பூக்கள் தூவிவிடப்பட்டு வாத்துகள் நீந்திச் செல்லுமாறு விடப்பட்டுள்ளது. பின்னர், வாத்துகளின் தலையில் பூக்களை வைத்து, வீடியோ பதிவு செய்து டிக்டாக்கில் பதிவிட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ பார்க்கும் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More