வைரமுத்து உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று பாடகி சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்துக்கு பதிலடி கொடுத்து டிவிட் பதிவு செய்துள்ளார்.
கடந்த சில தினங்களாக பிரபல பாடகி சின்மயி பிரபலங்கள் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்களைக் கொடுத்து வருகிறார். #MeeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. இவர்களில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண், பிரபல பாடகர் கார்த்திக் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை நேரடியாகவே கூறியிருந்தார். இதனால் தமிழ் திரையுலம் பெரும் அதிர்ச்சி அடைந்திருந்தது. பாடகி சின்மயிக்கு நடிகர், நடிகைகள் பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கம் அளித்து வைரமுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் முழுக்க, முழுக்க பொய்யானது. உள்நோக்கத்துடன் சொல்லப்படுபவை. பாலியல் குற்றம் சொல்பவர்கள், உண்மையிருந்தால் வழக்கு தொடரலாம். அப்படி தொடர்ந்தால் அவற்றை சந்திக்க தயாராக உள்ளேன். இவ்வாறு ஒரு வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
தற்போது இதுகுறித்து பாடகி சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், வைரமுத்து உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Mr. Vairamuthu should take a lie detector test.
— Chinmayi Sripaada (@Chinmayi) October 14, 2018
Enough said.