Home> Social
Advertisement

அமலாபால்-ன் துணிச்சலுக்கு நடிகர் சங்கம் பாராட்டு

மலேசியாவில் நட்சத்திர கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைஞர்களின் நடன ஒத்திகை நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் நடந்தது. இதில், நடிகை அமலாபாலும் கலந்து கொண்டார். அவர் நடன ஒத்திகையில் ஈடுபட தயாராகிக் கொண்டிருந்தபோது, அவரிடம் வந்து பேசிய ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.

அமலாபால்-ன் துணிச்சலுக்கு நடிகர் சங்கம் பாராட்டு

மலேசியாவில் நட்சத்திர கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைஞர்களின் நடன ஒத்திகை நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் நடந்தது. இதில், நடிகை அமலாபாலும் கலந்து கொண்டார். அவர் நடன ஒத்திகையில் ஈடுபட தயாராகிக் கொண்டிருந்தபோது, அவரிடம் வந்து பேசிய ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அமலாபால், மாம்பலம் போலீஸ் நிலையத்தில் அந்த நபர் பற்றி புகார் கடிதம் எழுதிக் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, அமலாபாலிடம் தவறான முறையில் நடந்து கொண்ட அழகேசன் என தெரியவந்ததை அடுத்து அந்த நபரை போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நடிகை அமலாபாலின் துணிச்சலான நடவடிக்கைக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Read More