தீவிர வானிலை நிகழ்வுகள் 2021 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு துன்பத்தைத் தந்தன. காட்டுத்தீ, வெப்ப அலைகள், வெள்ளம் முதல் சூ...
1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில், ஸ்பெயின் மிகக் கொடிய பனிப்புயலால் தாக்கப்பட்டு பல உயிர்களை பலி கொடுத்தது. (Photograph:AFP)
ஜனவரி 18 அன்று, பல தசாப்தங்களுக்குப் பிறகு இங்கிலாந்தில் அதிக மழைப்பொழிவு பதிவானது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கொட்டித் தீர்த்த கிறிஸ்டோப் புயல், நாடு முழுவதும் வெள்ளத்தை ஏற்படுத்தியது. ஜூலை 2021 இல், பல ஐரோப்பிய நாடுகள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. (Photograph:Reuters)
ஜனவரி இறுதியில் பிஜியை மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் தாக்கின. அதில், வெப்பமண்டல சூறாவளி அனா (tropical cyclone Ana) ஒருவரைக் கொன்றது, பல்லாயிரக்கணக்கானவர்களை புலம் பெயரச் செய்தது. பலத்த பொருளாதார சேதத்தை ஏற்படுத்தியது. (Photograph:Agencies)
பல தசாப்தங்களில் கிரேக்கத்தின் மிகக் கடுமையான வெப்ப அலையுடன் ஆகஸ்ட் தொடங்கியது. அந்தப் பருவம் நாட்டின் மிகவும் அழிவுகரமான தீ பருவங்களில் ஒன்றாக மாறியது.
(Photograph:Reuters)
பிப்ரவரி 7, 2021 அன்று, நந்தா தேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து, தண்ணீரை வெளியேற்றியது, இது பனிச்சரிவு மற்றும் பிரளயத்தை உருவாக்கியது, இது உத்தரகாண்டின் சாமோலி மாவட்டத்தில் வெள்ளத்தை ஏற்படுத்தியது. 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் அல்லது காணவில்லை. (Photograph:PTI)