PHOTOS

சனிக்கிழமையில் சனீஸ்வரரைத் தவிர யாரை வணங்கினால் சனிதோஷங்கள் நீங்கும்? அனுமார் வழிபாடு!

numan : சனீஸ்வரருக்கு உரிய சனிக்கிழமைகளில் சனிதேவரைத் தவிர, ஈஸ்வரன் மற்றும் அனுமாரையும் வணங்கினால் சனி தோஷங்கள் அகலும்......

Advertisement
1/8
ஆஞ்சநேயர் வழிபாடு
ஆஞ்சநேயர் வழிபாடு

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவது வைகுண்டப்பதவியைக் கொடுக்கும் என்பது ஐதீகம். ராமநாமம் சொல்லும் இடத்தில் அனுமார் இருப்பார் என்றால், அனுமனின் பெயரைச் சொல்லும் இடத்தில் ராமரும் இருப்பார்

2/8
ராமநாமம்
ராமநாமம்

பக்தனுக்கு பக்தனாக மாறும் இயல்புடைய அனுமார் ராமநாமத்தை உச்சரிப்பதிலேயே பரமசுகம் காணும் பக்தர். அஞ்சனையின் மைந்தனான ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை உகந்த நாள் என்பதற்கான காரணம் என்ன தெரியுமா?

3/8
கிரக தோஷங்கள்
கிரக தோஷங்கள்

அனுமான் வழிபாடு கிரக தோஷங்கள் அனைத்தையும் அகற்றும் என்பது ஐதீகம். அனைத்து கிரகங்களும் நீதிபதி என்று அழைக்கப்படும் சனீஸ்வரரை சாந்திப்படுத்துவது என்பது சுலபமானதல்ல, ஆனால், ஆஞ்சநேயரை திருப்திப்படுத்த ராமநாமம் ஒன்றே போதுமானது

4/8
வாயுபுத்திரன்
வாயுபுத்திரன்

பஞ்ச பூதங்களில் வாயுவின் மகனான ஆஞ்சநேயர் பக்தர்களின் குரலுக்கு வாயுவேகத்தில் வந்து துயர் தீர்ப்பார் என்பது நம்பிக்க்கை

5/8
ராமநாமம்
ராமநாமம்

ராமரை நெஞ்சில் வைத்திருக்கும் ஆஞ்சநேயரை நெஞ்சோடு நெஞ்சாக கட்டித் தழுவி அவரது பக்தியை ஸ்ரீராமர் ஏற்றுக் கொண்டார். ராமநாம மகிமையை அனுமாரைப் போல அறிந்தவர் வேறு யாருமே இருக்க முடியாது

6/8
சஞ்சீவினி மலை
சஞ்சீவினி மலை

சஞ்சீவனி மலையையே தூக்கிய அனுமார், தன்னை வேண்டுபர்களின் மலை போன்ற கவலைகளையும் மடுவாக குறைத்துவிடுவார் என்பது நம்பிக்கை

7/8
வெண்ணெய்க்காப்பு
வெண்ணெய்க்காப்பு

ஆஞ்சநேயரை வழிபடுபவர்கள் வடைமாலை மற்றும் வெண்ணெய் சாற்றி வணங்குவார்கள். அதிலும் சனிக்கிழமை வெண்ணைக்காப்பு மிகவும் விசேஷமானது.

8/8
வெற்றிலை மாலை
வெற்றிலை மாலை

பிரம்மாண்டமாய் வடிவம் எடுக்கக்கூடிய ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவது விஷேசமானது. வெற்றிலை மாலை சாற்றி அனுமரை வழிபட்டால், துன்பங்கள் எல்லாம் வெற்று இலையாய் மாறிவிடும்





Read More