PHOTOS

ஜலகிரகம் சந்திரனின் கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு!

Velli : ஆடி மாதத்தில் நீர்நிலைகள் வணங்கப்படுகிறது. இதற்கு காரணம், சந்திரனுக்குரிய கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம்...

Advertisement
1/8
ஜலராசிகள்
ஜலராசிகள்

12 ராசிகளில், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ஜலராசிகள், மற்றும் சந்திரன் உச்சம் பெறும் ரிஷப ராசிக்காரர்களும் ஆடி வெள்ளி மற்றும் ஆடிப்பெருக்கு நாளன்று அம்பாள் வழிபாடு செய்தால் அருமையான வாழ்க்கையைப் பெறலாம் 

2/8
ஆடி வெள்ளி
ஆடி வெள்ளி

ஆடி பெருக்கன்று சித்திரன்னம் எனப்படும், கலவை சாதங்கள் செய்து அவற்றை இறைவனுக்கு படைத்து அனைவரும் உண்பது வழக்கம்

3/8
ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ம் நாளன்று கொண்டாடப்படும் ஒரு முக்கியமான தமிழர் திருவிழா ஆகும். இயற்கையை வணங்கும், நீர்நிலைகளை வணங்கும் மிகவும் முக்கியமான பண்டிகை இது

4/8
கூழ்
கூழ்

ஆடி வெள்ளிக்கிழமை நாளன்று கூழ் காய்ச்சி, அதனை அனைவருக்கும் உண்ணக் கொடுப்பது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆடிக்கூழ் என்றே பெயர்பெற்ற இந்த ஆடி மாத கூழ் ஊற்றும் வழக்கம் மிகவும் தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் அன்னதானம் ஆகும்

5/8
நீர்நிலை
நீர்நிலை

நீர்நிலைகளுக்கு சென்று அங்கு பூஜைகள் செய்து நீர்த்தாயை வழிபடும் மரபு, இயற்கையை போற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அனுசரிக்கப்படுகிறது

6/8
பூஜை
பூஜை

ஆடி மாதம் அம்மன் வழிபாடு மற்றும் நீர்நிலைகளை வணங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. வாழ்க்கையின் அனைத்து சுகங்களையும் கொடுக்கும் வழிபாடு இது

7/8
வெள்ளி வழிபாடு
வெள்ளி வழிபாடு

தெய்வங்களை வணங்குவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆடி மாதம் அம்பாளை வழிபட உகந்த மாதம் என்றால், அதில் ஆடி வெள்ளி வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதம் ஆகும்

8/8
இயற்கை வழிபாடு
இயற்கை வழிபாடு

இயற்கை வழிபாட்டை இறை வழிபாடாக கொண்ட தமிழர் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக திகழும் ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வணங்கி வளம் பெறுவோம்





Read More