PHOTOS

SCSS பம்பர் திட்டம்: மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் வருமானம், அசத்தல் வட்டி.. இன்னும் பல நன்மைகள்

த்தை சேமிப்பதில் விருப்பம் உள்ளவர்கள் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் சேமிக்கலாம். இவற்றில் பணத்தை டெபாசிட் செய்து ஒவ்வொரு மாதமும் ...

Advertisement
1/8
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

பணி ஓய்வுக்கு பிறகான வாழ்க்கையை இலக்காக கொண்ட சேமிப்பு திட்டங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மிக முக்கியமான மற்றும் பிரபலமான திட்டமாக உள்ளது. 

2/8
முதியவர்களுக்கான ஒரு சிறப்பு திட்டம்
முதியவர்களுக்கான ஒரு சிறப்பு திட்டம்

அஞ்சல் அலுவலக எஸ்சிஎஸ்எஸ் (SCSS) திட்டம் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது. இதனுடன், இந்த திட்டம் விஆர்எஸ் எடுத்தவர்களுக்கும் பொருந்தும். தற்போது இத்திட்டத்திற்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. 

3/8
ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.10,250 சம்பாதிக்கலாம்
ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.10,250 சம்பாதிக்கலாம்

இந்தத் திட்டத்தில், மூத்த குடிமக்கள் ஒரே முறையில் வெறும் ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்து, ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.10,250 சம்பாதிக்க முடியும். வட்டியில் இருந்து மட்டும் 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இதற்கான முழு கணக்கீட்டை இங்கே தெரிந்து கொள்ளலாம். 

4/8
அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்:
அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்:

ஒன்றாக டெபாசிட் செய்யப்படும் பணம்: ரூ. 5 லட்சம், வைப்பு காலம்: 5 ஆண்டுகள், வட்டி விகிதம்: 8.2%, முதிர்வுத் தொகை: ரூ.7,05,000, வட்டி வருமானம்: ரூ 2,05,000, காலாண்டு வருமானம்: ரூ 10,250.

 

5/8
பாதுகாப்பான திட்டம்
பாதுகாப்பான திட்டம்

இந்த சேமிப்பு திட்டம் இந்திய அரசால் நடத்தப்படுகிறது. முதலீட்டிற்கான நம்பகமான மற்றும் பாதுகாப்பான விருப்பங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

6/8
வரி விலக்கு
வரி விலக்கு

வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-ன் கீழ், முதலீட்டாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்குப் பலனைப் பெறுகிறார்கள். - இந்த தபால் அலுவலகத் திட்டத்தின் கணக்கை நாட்டில் உள்ள எந்த மையத்திற்கும் மாற்றலாம். இத்திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படும்.

7/8
எஸ்சிஎஸ்எஸ் கணக்கை எவ்வாறு திறப்பது?
எஸ்சிஎஸ்எஸ் கணக்கை எவ்வாறு திறப்பது?

இந்த கணக்கை திறக்க, ஏதேனும் தபால் அலுவலகம் (Post Office) அல்லது அரசு/தனியார் வங்கியில் கணக்கு தொடங்கலாம். கணக்கை திறக்க விரும்பும் நபர்கள் பால் அலுவலகம் அல்லது அரசு/தனியார் வங்கிக்கு சென்று ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும். 

8/8
எந்தெந்த ஆவணங்கள் தேவை
எந்தெந்த ஆவணங்கள் தேவை

2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், அடையாளச் சான்றிதழ் மற்றும் பிற KYC ஆவணங்களின் நகல்களை படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். வங்கிக் கணக்கைத் திறப்பதன் நன்மை என்னவென்றால், டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் பெறப்பட்ட வட்டியை நேரடியாக வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம்.

 





Read More