PHOTOS

Rishabh Pant: ரிஷப் பந்த் குறித்து முக்கிய அப்டேட் வெளியிட்ட பிசிசிஐ!

லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 2024 ஐபிஎல் போட்டியில் விக்கெட் கீப்பர்-பேட...

Advertisement
1/5
rishabh pant
rishabh pant

2022ல் நடந்த மிகப்பெரிய கார் விபத்தால் கடந்த ஒரு வருடமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ரிஷப் பந்தை விக்கெட் கீப்பர்-பேட்டராக விளையாட பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.

2/5
rishabh pant
rishabh pant

ரிஷப் பந்த் தற்போது 100 சதவீதம் பிட் ஆகி உள்ளார் என்று பிசிசிஐ அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் விக்கெட் கீப்பராக தொடர்வதற்கும் பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.  மார்ச் 23 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் பந்த் விளையாட உள்ளார்.

3/5
பந்த்
பந்த்

2023 ஆம் ஆண்டு காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பந்த் சீரான முன்னேற்றம் அடைந்து வந்தார். பந்த் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியாது என்று பலர் கூறினாலும் தற்போது மீண்டு வந்துள்ளார்.

4/5
ஐபிஎல் 2024
ஐபிஎல் 2024

முதலில் ஐபிஎல் 2024 போட்டிகளில் பந்த் கேப்டன் மற்றும் பேட்டராக விளையாடுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது விக்கெட் கீப்பிங்கும் செய்வார் என்று பிசிசிஐ கூறி உள்ளது.  இருப்பினும் இறுதி முடிவை அவரது உடற்தகுதி பொறுத்து டெல்லி அணி முடிவு செய்யும்.

5/5
பிசிசிஐ
பிசிசிஐ

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், "பந்த் விக்கெட் கீப்பிங் செய்தால், அவர் உலகக் கோப்பையில் விளையாடுவார்" என்று கூறி இருந்தார்.  ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி மே முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





Read More