PHOTOS

கஜமுகனுக்கு ஆவணி வளர்பிறை சதுர்த்தி விரதம் வழிபாடு! முருகனுக்கு மூத்தோனின் பிறந்தநாள்!

4 : ஆவணி மாத சதுர்த்தி நாளன்று விநாயகப் பெருமான் பிறந்ததினம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், வளர்பிறை நான்காம் நாளில் பிள்ளைய...

Advertisement
1/9
சித்திவிநாயகர்
சித்திவிநாயகர்

விநாயகர் மிகவும் எளிமையானவர், வணங்குவதற்கு எளிதானவர். நினைத்த மாத்திரத்தில் நமக்கு வரங்களை அளிக்கும் சித்திவிநாயகர். சிவசக்தியின் மூத்த மைந்தனான இவருக்கு பல பெயர்கள் உண்டு

2/9
கணபதி
கணபதி

கணங்களிற்கு அதிபதி என்பதால் கணபதி என்று பெயர். பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாக விளங்கும் சிவபுத்திரர் கணபதி என்று அழைக்கப்படுகிறார்

3/9
ஆனைமுகன்
ஆனைமுகன்

யானை முகத்தை உடையவரான கணபதி ஆனைமுகன் என்றழைக்கப்படுகிறார்

4/9
கஜமுகன்
கஜமுகன்

யானையின் மறுபெயர் கஜம். யானையின் தலையைக் கொண்டவர் என்பதால் கஜமுகன் என்று ஆனைமுகனை அழைக்கிறோம்  

5/9
விநாயகர்
விநாயகர்

விக்னங்களை போக்கும் சிவமைந்தன் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்

6/9
ஐங்கரன்
ஐங்கரன்

கணபதிக்கு ஐந்து கரங்கள் இருப்பதால் ஐங்கரன் என்று அழைக்கப்படுகிறார்

7/9
பிள்ளையார்
பிள்ளையார்

சக்தி அன்னை பார்வதி, கையால் பிடித்து வைத்ததால், பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். விநாயகப் பெருமான், எங்கு எப்போது நினைத்தாலும் எளிமையாக வணங்கக்கூடியவர். அனைவருக்கும் பிள்ளையைப் போல உதவுபவர்

 

8/9
ஏகதந்தன்
ஏகதந்தன்

ஒற்றை தந்தத்தை கொண்டுள்ளதால் ஏகதந்தன் என்று பெயர் பெற்றவர் கஜமுகன்

9/9
பொறுப்புத் துறப்பு
பொறுப்புத் துறப்பு

பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

 





Read More