வலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. புதிய விதியின் கீழ், வாகனம் ஓட்ட கற்றுக் கொள்பவருக்கு கொடுக்கும் “L” உரிமத்தைப் பெறுவதற்...
ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதற்கும் புதுப்பிப்பதற்குமான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (Ministry of Road Transport & Highways) கொண்டு வந்துள்ளது.
மத்திய அரசின் இந்த முயற்சிகள் புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கான செயல்முறையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பதிவு செய்த சான்றிதழை புதுப்பிப்பது இப்போது 60 நாட்களுக்கு முன்பே செய்யப்படலாம், அதே நேரத்தில் தற்காலிக பதிவுக்கான கால அவகாசமும் 1 மாதத்திலிருந்து 6 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், “L” உரிமத்திற்கான நடைமுறையில் அரசாங்கம் இப்போது சில மாற்றங்களைச் செய்துள்ளது, அதன்படி ஓட்டுநர் சோதனை இப்போது டுடோரியல் மூலம் ஆன்லைனில் செய்யப்படும். சுருக்கமாக சொல்வதானால், இப்போது உரிம சோதனைக்காக ஆர்டிஓ (RTO) அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியமில்லை.
நாடு முழுவதும் COVID-19 பரவுவதைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் காரணமாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
2020, பிப்ரவரி முதல் தேதி முதல் காலாவதியாகும் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து ஆவணங்களின் செல்லத்தக்க காலம் 2021 ஜூன் 30 என்று அரசு அறிவித்துள்ளது. இது போக்குவரத்து தொடர்பான சேவைகளைப் பெற குடிமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால், இந்த விவகாரம் தொடர்பான இறுதி அறிவுறுத்தலாகவே இது இருக்கலாம் என்றும் அரசின் சுற்றறிக்கை மேலும் கூறியுள்ளது.