PHOTOS

50 கோடி PMJDY வாடிக்கையாளர்களுக்கும் அலர்ட்! மாற்றங்கள் தொடர்பாக நிதியமைச்சர் அப்டேட்

n Yojana: பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா திட்டத்தின் கீழ் கணக்கு வைத்திருக்கும் 50 கோடி மக்கள...

Advertisement
1/8
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டம் தொடங்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.  இந்தத் திட்டத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் என்ன?

2/8
ஜன்தன் யோஜனா
ஜன்தன் யோஜனா

ஜன்தன் யோஜனா மற்றும் டிஜிட்டல் மாற்றம் மூலம் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் நாட்டில் நிதி உள்ளடக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக நிதியமைச்சர் கூறினார். இதன் மூலம் முறையான வங்கி அமைப்பில் 50 கோடிக்கும் அதிகமானோர் சேர்க்கப்பட்டனர், மொத்த வைப்புத்தொகை இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்  

3/8
பெண்கள் கணக்கு
பெண்கள் கணக்கு

ஜன்தன் யோஜனாவில், 55.5 சதவீத வங்கிக் கணக்குகள் பெண்களால் தொடங்கப்பட்டுள்ளன. இது தவிர, கிராமப்புற / நகர்ப்புற பகுதிகளில் 67 சதவீத கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இது உலகின் மிகப்பெரிய நிதி உள்ளடக்க முயற்சிகளில் ஒன்றாகும். இந்தத் திட்டத்தில், மார்ச் 2015 இல் 14.72 கோடியாக இருந்த வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 3.4 மடங்கு அதிகரித்து 16 ஆகஸ்ட் 2023க்குள் 50.09 கோடியாக உயர்ந்துள்ளது.

4/8
டெபாசிட்கள்
டெபாசிட்கள்

மொத்த டெபாசிட்கள் மார்ச் 2015ல் ரூ.15,670 கோடியில் இருந்து ஆகஸ்ட் 2023க்குள் ரூ.2.03 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 

5/8
ஜன்தன்-ஆதார்-மொபைல்
ஜன்தன்-ஆதார்-மொபைல்

PMJDY மூலம் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் மற்றும் டிஜிட்டல் மாற்றம் மூலம், ஒன்பது ஆண்டுகளில் நாட்டில் நிதி உள்ளடக்கத்தில் புரட்சி ஏற்பட்டுள்ளது. பங்குதாரர்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் கூட்டு முயற்சிகளுடன், PMJDY நாட்டின் நிதி உள்ளடக்கத்தின் நிலப்பரப்பை மாற்றுவதற்கான ஒரு முக்கிய முயற்சியாக உருவெடுத்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்

 

6/8
நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத்
நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத்

ஜன்தன்-ஆதார்-மொபைல் (JAM) மூலம் அரசுத் திட்டங்களை சாமானியர்களின் கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாக நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் தெரிவித்தார். 

7/8
ரூ.10,000 வரை ஓவர் டிராஃப்ட் வசதி
ரூ.10,000 வரை ஓவர் டிராஃப்ட் வசதி

PMJDY கணக்குகள் நேரடி பலன் பரிமாற்றம் (DBT) போன்ற மக்களை மையமாகக் கொண்ட முயற்சிகளின் அடிப்படையாக மாறியுள்ளது. இது சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும், குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு பங்களித்துள்ளது.

8/8
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY)
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY)

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 28 ஆகஸ்ட் 2014 அன்று தொடங்கப்பட்டது. நாட்டின் நிதி நிலைமையை மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. PMJDY கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. கணக்கில் குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இது தவிர, இலவச ரூபே டெபிட் கார்டு, ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீடு மற்றும் ரூ.10,000 வரை ஓவர் டிராஃப்ட் வசதி போன்ற சேவைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன





Read More