PHOTOS

அமெரிக்காவின் பென்டகனை விஞ்சும் சூரத் வைர கட்டிடம்... கொஞ்சம் சுத்தி பார்க்கலாம் வாங்க..!!

குஜராத் மாநிலம் சூரத்தில், சூரத் டயமண்ட் போர்ஸ் என்ற பெயரில் வைர வியாபாரத்திற்கான கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 

...
Advertisement
1/7
டயமண்ட் போர்ஸ்
டயமண்ட் போர்ஸ்

குஜராத் மாநிலம் சூரத் நகரில் சூரத் டயமண்ட் போர்ஸ் கட்டடம் குறித்து ட்வீட் செய்த்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 80 ஆண்டுகளாக உலகின் மிகப் பெரிய அலுவலகக் கட்டிடமாக இன்று வரை செயல்பட்டு வரும் பென்டகனை இப்போது சூரத் டயமண்ட் போர்ஸ் முந்திவிட்டது  என தெரிவித்துள்ளார். 

2/7
டயமண்ட் போர்ஸ்
டயமண்ட் போர்ஸ்

சுமார் 3400 கோடி ரூபாய் செலவில் 35.54 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள சூரத் டயமண்ட் போர்ஸ், கடினமான மற்றும் மெருகூட்டப்பட்ட வைர வர்த்தகத்தின் உலகளாவிய மையமாக இருக்கும்.

3/7
டயமண்ட் போர்ஸ்
டயமண்ட் போர்ஸ்

உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் வைரம் வாங்குபவர்கள் சூரத்தில் வர்த்தகம் செய்வதற்கான உலகளாவிய தளத்தைப் பெறும் நிலையில், சுமார் 1.5 லட்சம் பேர் வர்த்தக வசதி மூலம் வேலை பெறுவார்கள். 

4/7
டயமண்ட் போர்ஸ்
டயமண்ட் போர்ஸ்

சூரத் டயமண்ட் போர்ஸ் சூரத்தின் வைரத் தொழிலின் ஆற்றல் மற்றும் வளர்ச்சியைக் காட்டுகிறது எனவும், வர்த்தகம், புதுமை மற்றும் ஒத்துழைப்புக்கான மையமாக விளங்கும் எனவும், நமது பொருளாதாரத்தை மேலும் உயர்த்தி, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

5/7
டயமண்ட் போர்ஸ்
டயமண்ட் போர்ஸ்

டயமண்ட் போர்ஸ் என்பது உலகின் மிகப்பெரிய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கட்டிடமாகும். இதில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட 4,500 அலுவலகங்களைக் கொண்டுள்ளது. 

6/7
டயமண்ட் போர்ஸ்
டயமண்ட் போர்ஸ்

பென்டகனை விட பெரிய அளவில் இருக்கும் இந்த வர்த்தக மையம், நாட்டின் மிகப்பெரிய சுங்க அனுமதி இல்லமாகும்.

7/7
டயமண்ட் போர்ஸ்
டயமண்ட் போர்ஸ்

டயமண்ட் போர்ஸ் கட்டிடத்தில் 175 நாடுகளைச் சேர்ந்த 4,200 வர்த்தகர்கள் தங்கும் வசதி உள்ளது. அவர்கள் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்களை வாங்க சூரத்திற்கு வருவார்கள்.





Read More