லுங்கு நடிகர் பவண் கல்யாண் நடு ரோட்டில் படுத்துக்கொண்டு போராட்டம் ச...
தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர், பவன் கல்யாண்.
இவர் ஜனசேனா அரசியல் கட்சியின் தலைவர்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
சந்திரபாபு நாயுடுவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான பவன் கல்யாண் தெலங்கானா-ஆந்திரா எல்லையில் இருக்கும் என்.டி.ஆர் மாவட்டத்திற்குள் நுழைய முயன்றார்.
அப்போது போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் சாலையிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
போலீஸார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும் அவர் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
ஒரு கட்டத்தில் தன்னால் இந்த இடத்தி இருந்து நகர முடியாது என்று கூறி சாலையிலேயே படுத்துவிட்டார். இதனையடுத்து போலீஸார் அவரை அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.