PHOTOS

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் 3 பரிசுகள்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வு

-க்கான டிஏ உயர்வு (DA Hike) 3% முதல் 4% வரை இருக்கக்கூடும் என கூறப்படுகின்றது. முன்னதாக ஜனவரி 2024 -இல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவி...

Advertisement
1/11
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்கள்

இந்த செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளிவர உள்ளது. இது நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு செய்தியை பற்றது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.

2/11
7வது ஊதியக்குழு
7வது ஊதியக்குழு

7வது ஊதியக் குழு: ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வரும் என மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) ஆவலோடு காத்திருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பை தான் மத்திய அரசு இந்த செப்டம்பர் மாதம் வெளியிடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.

3/11
டிஏ உயர்வு
டிஏ உயர்வு

ஜூலை 2024 -க்கான டிஏ உயர்வு (DA Hike) 3% முதல் 4% வரை இருக்கக்கூடும் என கூறப்படுகின்றது. முன்னதாக ஜனவரி 2024 -இல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (Dearness Allowance) 4% அதிகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மொத்த டிஏ (DA) டிஆர் (DR) 50% ஆக உயர்ந்தன.

4/11
ஊதிய உயர்வு
ஊதிய உயர்வு

தற்போது ஜூன் 2024 முதல் அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 53% ஆகவும், 4% உயர்த்தப்பட்டால்  மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 54% ஆகவும் ஏற்றம் காணும். இதனால் ஊழியர்களுக்கு மிகப்பெரிய சம்பள உயர்வு இருக்கும்.

5/11
டிஏ ஹைக்
டிஏ ஹைக்

டிஏ ஹைக் எப்போது அறிவிக்கப்படும்? அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு செப்டம்பர் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரத்தில் வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது. ஒரு சாரார் அகவிலைப்பை 3 சதவீதம் அதிகரிக்கும் என்றும் சிலர் இது 4 சதவீத ஏற்றத்தைக் காணும் என்றும் தெரிவிக்கின்றனர். 

6/11
டிஏ அரியர்
டிஏ அரியர்

ஜூலை 2024-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் வந்தாலும், ஜூலை முதல் ஊழியர்கள் டிஏ உயர்வுக்கான டிஏ அரியர் தொகையை பெறுவார்கள். இதனால் செப்டம்பர் மாத சம்பளத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

7/11
ஏஐசிபிஐ குறியீடு
ஏஐசிபிஐ குறியீடு

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகின்றது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்கள் முதல் திருத்தங்கள் அமல்படுத்தப்படுகின்றன. ஜனவரி மாத அகவிலைப்படி முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையிலும், ஜூலை மாத அகவிலைப்படி ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் (AICPI Index) அடிப்படையிலும் தீர்மானிக்கப்படுகின்றது.

8/11
ஊதிய உயர்வு கணக்கீடு
ஊதிய உயர்வு கணக்கீடு

சம்பள உயர்வு கணக்கீடு: அகவிலைபப்டி 3% அதிகரித்தால் ஊழியர்களுக்கு நல்ல ஊதிய உயர்வு இருக்கும். இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 என வைத்துக்கொள்வோம். ஜூலை மாத திருத்தத்திற்குப் பிறகு, 3% டிஏ உயர்வால் அவரது மொத்த சம்பளம் ரூ 540 அதிகரிக்கும். இந்த அதிகரிப்பு மூலம் ஊழியருக்கு ஆண்டுக்கு ரூ.6,480 கூடுதல் வருமானம் கிடைக்கும். ரூ 56,900 அடிப்படை சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு டிஏ உயர்வு (DA Hike) மூலம் மாத சம்பளம் ரூ.1,707, ஆண்டு சம்பளம் ரூ.20,484 என்ற அளவில் உயரும்.

9/11
அகவிலைப்படி
அகவிலைப்படி

நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அகவிலைப்படி அளிக்கப்படுகின்றது. ஆண்டுக்கு இரண்டு முறை இதில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. பணவீக்கம், அரசின் பொருளாதார நிலை, தொழிலாளர் அமைச்சகம் வெளியிடும் தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த திருத்தங்கள் ஏற்படுகின்றன. 

10/11
அகவிலைப்படி கணக்கீடு
அகவிலைப்படி கணக்கீடு

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 

11/11
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 





Read More