Home> Movies
Advertisement

நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட்: கடுப்பான மதுமிதா.. கையை அறுத்துக் கொண்ட மாயா..

Nenjathai Killathe Todays Episode: இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "நெஞ்சத்தை கிள்ளாதே" சீரியலில் இன்று நடக்கப் போவது குறித்து முன்னோட்டம் பார்ப்போம்.

நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட்:  கடுப்பான மதுமிதா.. கையை அறுத்துக் கொண்ட மாயா..

Zee Tamil TV Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் கௌதமை பார்க்க வந்து மது காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, மது நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருக்க கௌதம் வெளியே வராமல் இருக்க சந்தோஷ் கீழே வருகிறான். மது அவனிடம் பேச அவன் இப்போ கௌதம் டென்ஷனா இருக்கான், பார்க்க முடியாது என்று சொல்கிறான். 

உடனே மது அவருக்கு அவருடைய குடும்பம் எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி எனக்கு என்னுடைய குடும்பம் ரொம்ப முக்கியம், அவங்களுக்கு ஏதாவது ஒன்னுனா சும்மா இருக்க மாட்டேன் என்று சொல்ல சந்தோஷ் என்ன ரெண்டு பேரோட கேரக்டரும் ஒரே மாதிரி இருக்கு என ஆச்சரியப்படுகிறான். 

அதன் பிறகு அவன் கௌதமிடம் வந்து மது காத்துக்கொண்டிருக்கும் விஷயத்தை சொல்ல கௌதம் அவங்க எல்லாம் பணத்துக்காக அப்படி பண்றவங்க என்று பார்க்க மறுத்து விடுகிறான்.  

மேலும் படிக்க - நீங்கள் பொறுப்பேற்பீர்களா... சமந்தாவை கடுமையாக விமர்சனம் செய்த பிரபலம்!

இதையடுத்து வீட்டுக்கு வரும் மாயா ஜீவா போன் எடுக்காததால் கையை அறுத்துக் கொள்ள அதை பார்த்து கௌதம் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து இதற்கு காரணம் ஒரு பையனா தான் இருப்பான் அவன் யாருன்னு கண்டுபிடி என்று சொல்கிறான். 

மறுபக்கம் மது அப்செட்டாக இருக்க அதிதி என்னாச்சு என்று கேட்க ஒருத்தனை பார்க்க போயிருந்தேன். ஆனா அவன் என்னை ரொம்ப நேரமா காக்க வச்சுட்டான் என்று சொல்ல அதிதி போன் நம்பர் கண்டுபிடிச்சு திட்டலாம் என்று ஐடியா கொடுக்கிறாள். 

அடுத்ததாக சந்தோஷ் ஜீவா வீட்டு லேண்ட் லைன் நம்பரை கண்டுபிடிக்க ஜீவா அதிதியை பார்க்க ஹாஸ்பிடல் வந்திருக்கும் சமயத்தில் கௌதம் சந்தோஷ் கொடுத்த நம்பருக்கு போன் செய்ய மதுமிதா போனை எடுக்கிறாள். 

போனில் குரல் சரியாக கேட்காத நிலையில் இருவரும் சண்டை போட்டு போனை வைக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க - அஞ்சலி நடிப்பில் புதிய சீரிஸ் 'பஹிஷ்கரனா' .. வரும் 19 முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமிங்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More